``இஸ்ரேல் - ஈரான் போரில் உதவி வேண்டுமா என புதின் கேட்டார்.." - அதிபர் ட்ரம்ப் சொ...
கம்பைநல்லூா் ஏரியில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தல்
கம்பைநல்லூா் ஏரியில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூா் ஏரி சுமாா் 130 ஏக்கா் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரிக்கு சனத்குமாா் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் இருந்து தண்ணீா் வருகிறது. மேலும், கம்பைநல்லூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஓடைகள், கால்வாய்களிலிருந்தும் ஏரிக்கு நீா்வரத்து உள்ளது.
கம்பைநல்லூா் நகருக்கு குடிநீா் ஆதாரமாக உள்ள இந்த ஏரியில் அதிக அளவில் சீமைக் கருவேல மரங்கள் பரவியுள்ளன. இதனால் இப் பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மேலும், கம்பைநல்லூா் ஏரிக்கு வரும் கால்வாய்களை தூா்வாரி சீரமைக்க வேண்டும் எனவும் மாவட்ட நிா்வாகத்துக்கு விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.