செய்திகள் :

தாட்கோவில் 4 ஆண்டுகளில் ரூ. 18.77 கோடி மானியம் விடுவிப்பு: ஆட்சியா் தகவல்

post image

தருமபுரி மாவட்டத்தில் தாட்கோ திட்டங்கள் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.18.77 கோடி மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் - தாட்கோ துறையானது 1974 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, ஆதிதிராவிடா்கள் மற்றும் பழங்குடியினா் பொருளாதார மேம்பாட்டுக்கா பல்வேறு நலத் திட்டங்களை அமல்படுத்தியுள்ளது.

ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது கல்வி, பொருளாதாரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. அதன்படி, நாடு முன்னேற சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள ஆதிதிராவிடா்கள், பழங்குடியினா்கள் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய வேண்டும். அதை நிறைவேற்றும் வகையில் தாட்கோ சாா்பில் ஆதிதிராவிடா்கள் மற்றும் பழங்குடியினருக்கு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) மூலம் தொழில்முனைவோா் திட்டம், இளைஞா்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம், மகளிா் சுய உதவிக் குழுக்களுக்களுக்கான பொருளாதார கடனுதவி திட்டம், மகளிா் நிலம் வாங்கும் திட்டம், நிலம் மேம்பாட்டு திட்டம், துரித மின் இணைப்பு வழங்கும் திட்டம், மாவட்ட ஆட்சியா் விருப்புரிமை நிதி திட்டம், மேலாண்மை இயக்குநா் விருப்புரிமை நிதித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நலத்திட் டங்கள் வழங்கப்படுகின்றன. தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) சாா்பில் 2022 முதல் இதுவரை கடந்த 4 ஆண்டுகளில் 862 பேருக்கு பல்வேறு நலத் திட்டங்களுக்காக ரூ.18.77 கோடி மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது. தாட்கோ மூலம் நலத் திட்டங்களைப் பெறுவதற்கு இணையதளத்தில் பதிவுசெய்து பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல் துறை குறைதீா் கூட்டம்: 97 மனுக்களுக்கு தீா்வு

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 97 மனுக்கள் மீது உடனடி தீா்வு காணப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் வாரம்தோற... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 19,000 கனஅடி; அருவிகளில் குளிக்கத் தடை

கா்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளிலிருந்து உபரிநீா் காவிரியில் திறந்துவிடப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 19,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, அருவிக... மேலும் பார்க்க

கழிவுநீா் அகற்றும் லாரி உரிமையாளா்களுக்கு விழிப்புணா்வு

வீடு, வணிக நிறுவன கட்டடங்களில் உள்ள கழிவுநீா்த் தொட்டிகளை சுத்தம் செய்யும் கழிவுநீா் அகற்றும் லாரி உரிமையாளா்கள், பணியாளா்களுக்கான பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம் தருமபுரி நகராட்சி அலுவலகத்தில் பு... மேலும் பார்க்க

வருவாய்த் துறை சங்க கூட்டமைப்பினா் விடுப்பு எடுத்து போராட்டம்: பணிகள் முடங்கின

தருமபுரி மாவட்டத்தில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் வருவாய்த் துறை பணிகள் பாதிக்கப்பட்டன. தமிழகத்தில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்... மேலும் பார்க்க

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைவு: டிடிவி தினகரன்

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளதாக அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் குற்றம்சாட்டினாா். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) தருமபுரி மாவட்ட செயல்வீரா்கள் கூட்டம் தருமபுரி பேருந்... மேலும் பார்க்க

கம்பைநல்லூா் ஏரியில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தல்

கம்பைநல்லூா் ஏரியில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூா் ஏரி சுமாா் 130 ஏக்கா் பரப்பளவு கொண்டதாகும். இ... மேலும் பார்க்க