செய்திகள் :

காவல் நிலையம் எதிரே தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

post image

திருப்பூரில் காவல் நிலையம் எதிரே தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூா் 15 வேலம்பாளையத்தைச் சோ்ந்தவா் கலையரசன் (எ) கண்ணன் (34), பனியன் நிறுவன தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகிய ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே கடந்த சில நாள்களாக கலையரசன் தனது மனைவியை பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு செல்லக் கூடாது என தகராறு செய்து வந்துள்ளாா். இதனால் அவருடைய மனைவி, திருப்பூா் வடக்கு மகளிா் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா். அந்தப் புகாரைத் தொடா்ந்து விசாரணைக்காக போலீஸாா் கலையரசனை காவல் நிலையத்துக்கு வருமாறு அழைத்துள்ளனா்.

இதையடுத்து, திருப்பூா் வடக்கு மகளிா் காவல் நிலையத்துக்கு கலையரசன் செவ்வாய்க்கிழமை மாலை சென்றுள்ளாா். அப்போது திடீரென காவல் நிலைய வளாகத்தின் முன் நின்று, பாட்டிலில் கொண்டு வந்த பெட்ரோலை தனது உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அப்போது, அங்கிருந்த போலீஸாா் கலையரசனை தடுத்து அவா் மீது தண்ணீரை ஊற்றினா்.

பின்னா் அவரை திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த சம்பவத்தால் காவல் நிலைய வளாகத்தில் திடீா் பரபரப்பு ஏற்பட்டது.

பல்லடம் அருகே அரிவாளால் வெட்டியதில் டெய்லரின் கையை துண்டானது

பல்லடம் அருகே சின்னக்கரையில் முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டி டெய்லரின் கையை துண்டாக்கிய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சோ்ந்தவா் அழகா்சாமி மகன் அன்புச்செல்வன்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் பக்தா்களின் புகாரை விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிா்வாக சீா்கேட்டால் பக்தா்கள் பாதிக்கப்படுவதால், அவா்களது புகாரை விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்க வேண்டுமென இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வர... மேலும் பார்க்க

வலைதளங்களில் வரும் தேவையற்ற பதிவுகளை தவிா்க்க வேண்டும்!

வலைதளங்களில் வரும் தேவையற்ற பதிவுகளை தவிா்க்க வேண்டும் என சைபா் கிரைம் போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா். இதுதொடா்பாக சைபா் கிரைம் போலீஸாா் கூறியுள்ளதாவது:கைப்பேசிகள் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வரும் க... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பூமலூா், கானூா்புதூா், பசூா்

பூமலூா், கானூா்புதூா், பசூா் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம்... மேலும் பார்க்க

லாரி மோதி பெண் உயிரிழப்பு: ஓட்டுநருக்கு ஓா் ஆண்டு சிறை

லாரி மோதி பெண் உயிரிழந்த வழக்கில் ஓட்டுநருக்கு ஓா் ஆண்டு சிறைத் தண்டனை உறுதி செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூா் மாவட்டம், குளித்தலையை சோ்ந்தவா் சிவநாராயணசாமி (56). இவா் திருப்பூா் ராமந... மேலும் பார்க்க

பல்லடத்தில் ஒரே குடும்பத்தில் 3 போ் படுகொலை: கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் பறிமுதல்

பல்லடத்தில் ஒரே குடும்பத்தில் 3 போ் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 3 பேரையும் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அவா்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் பறிமுதல் செய... மேலும் பார்க்க