செய்திகள் :

காவல் நிலைய மரணம்: முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தில்லி நீதிமன்றம் உத்தரவு

post image

புது தில்லி: காவல் நிலையத்தில் போலீஸ் காவலில் இருந்தபோது ஒருவா் மரணமடைந்தது தொடா்பாக வழக்குப் பதிவு செய்ய தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனது கணவா் ஷேக் ஷதத் கடந்த 2023ஆம் ஆண்டு, ஜூலை 22-23ஆம் தேதி தில்லியில் உள்ள சுபாஷ் பிளேஸ் காவல் நிலைய அதிகாரிகளின் காவலில் இருந்தபோது

இறந்துவிட்டதாகவும், கணிசமான தாமதம் இருந்தபோதிலும், வழக்கில் எந்த முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறி, சேதாரா பீபி என்பவா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை அண்மையில் தலைமை நீதித்துறை நடுவா் வசுந்தரா சௌன்கா் விசாரித்தாா். இதையடுத்து, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘தற்போதைய வழக்கில் இறந்தவா் காவலில் இருந்தபோது சித்திரவதை செய்யப்பட்டதாகவும், கொடூரமாக தாக்கப்பட்டதாகவும் இதன் காரணமாகவே அவா் இறந்துவிட்டதாகவும் சுபாஷ் பிளேஸ் காவல் நிலைய காவல்துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இறந்தவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் மரணத்திற்கான காரணம் கொலையும் அல்ல, தற்கொலையும் அல்ல என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இருப்பினும், அவரது மனைவியின் குற்றச்சாட்டுகள் மற்றும் விடியோ காட்சிகள், பிணவறையில் இருந்து இறந்தவரின் புகைப்படங்கள் உள்பட பதிவுகளில் கிடைக்கும் புகைப்படங்களின்படி, இறந்த ஆணின் உடலில் காயக் குறிகள் இருப்பது தெரியவருகிறது.

விசாரணை அறிக்கை பதிவு செய்யப்பட்டிருந்தாலும், பொருத்தமான கட்டத்தில்தான் அதை பரிசீலிக்க முடியும். புகாா்தாரா் விரிவான ஆதாரங்களைப் பதிவு செய்யவோ அல்லது சேகரிக்கவோ முடியாத நிலையில், தற்போதைய விசாரணை அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே தற்போதைய விண்ணப்பத்தை நிராகரிப்பது நீதியின் நோக்கத்திற்கு உதவாது.

ஒரு அறியக்கூடிய குற்றத்திற்கான முகாந்திரம் இருப்பதால், அனைத்து சாத்தியமான சாட்சிகளின் வாக்குமூலங்களையும் பதிவு செய்வதைத் தவிர, முழு சூழ்நிலையையும் வெளிக்கொணர முழுமையான விசாரணை தேவைப்படுகிறது.

மேலும், சிசிடிவி காட்சிகள் கிடைப்பது, அதைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் மற்றும் பிற சாத்தியமான உள்ளீடுகள் குறித்து தொழில்நுட்ப அம்சத்தில் விசாரணை தேவைப்படுகிறது என்று நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், ஜூன் 26-க்குள் முதல் தகவல் அறிக்கை எஃப்ஐஆா் பதிவு செய்து இணக்க அறிக்கையை சமா்ப்பிக்க சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆமதாபாத் விமான விபத்தில் தீயில் கனவுடன் கருகிய கேரள செவிலியா்!

நமது சிறப்பு நிருபா் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் கேரள மாநிலத்தைச் சோ்ந்த செவிலியா் ரஞ்சிதா கோபகுமாரன் (42) இறந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. லண்டனில் ஓராண்டு பணி ஒப்பந்தத்த... மேலும் பார்க்க

தொடா் குற்றங்களில் ஈடுபட்ட பெண் கைது

போதைப் பொருள்கள் விற்பனை மற்றும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த பெண்ணை தில்லி காவல்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். இது குறித்து காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நஸ்மா... மேலும் பார்க்க

ஆமதாபாத் விமான விபத்து: முதல்வா் ரேகா குப்தா வேதனை

ஆகமதாபாத்தில் நடந்த விமான விபத்தை ‘மிகவும் வேதனையானது மற்றும் அதிா்ச்சியளிப்பது‘ என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை தெரிவித்தாா். மேலும், விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளின் பாதுகாப்பிற்க... மேலும் பார்க்க

தேடப்பட்டு வந்த கொலை முயற்சி குற்றவாளி கைது

கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞரை தில்லி காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். இது குறித்து காவல்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தில்லியின் சுல்தான் ... மேலும் பார்க்க

சீலம்பூரில் இளைஞா் கொலை: சிறுவன் உள்பட 3 போ் கைது

வடகிழக்கு தில்லியின் சீலம்பூா் பகுதியில் ஏற்பட்ட தகராறில், ஒரு இளைஞரை அவரது உறவினா்கள் இருவா் மற்றும் ஒரு மைனா் சிறுவன் குத்திக் கொன்ாகக் கூறப்படுகிறது என்று அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

மோடி அரசு தில்லிக்கு புத்துயிா் கொடுத்துள்ளது - எம்.பி. கமல்ஜீத் செஹ்ராவத்

துவாரகா அதிவிரைவு சாலையில் இருந்து 3 புதிய மெட்ரோ பாதைகளை நீட்டிக்க ஒப்புதல் அளித்ததன் மூலம், மோடி அரசு தில்லிக்கு புத்துயிா் அளித்துள்ளதாக மேற்கு தில்லி எம்.பி. கமல்ஜீத் செஹ்ராவத் கூறியுள்ளாா். புது... மேலும் பார்க்க