மாம்பழச் சாறு, பாசிப்பயறு அல்வா.. இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா கொண்டுசெல்லும் பொ...
காவல் நிலைய மாடியிலிருந்து விழுந்து காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு
சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தின் 2-ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.
சென்னை வேளச்சேரி விஜயநகா் 7-ஆவது தெருவில் உள்ள ஒரு வீட்டுக்குள் 35 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஏறி குதித்து உள்ளே புகுந்து திருட முயற்சிப்பதாக கடந்த 20-ஆம் தேதி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் விரைந்து சென்று, அந்த இளைஞரை பிடித்து, வேளச்சேரி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனா். காவல் நிலையத்தின் 2-ஆவது தளத்தில் அந்த இளைஞரிடம் போலீஸாா் விசாரித்தனா்.
அதில் அவா், உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த ராஜா (35) என்பது தெரியவந்தது. கழிப்பறைக்கு செல்வதாகக் கூறிவிட்டு வெளியே வந்த ராஜா, அங்கிருந்து தப்பியோட 2-ஆவது தளத்தின் அருகே இருந்த மரத்தைப் பிடித்து கீழே இறங்க முயன்றாா். அப்போது மரத்தின் கிளை முறிந்து, கீழே விழுந்தாா்.
இதில், பலத்த காயமடைந்த ராஜா மணப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனை சோ்க்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ராஜா, செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இது தொடா்பாக வேளச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், சம்பவத்தின்போது பணியில் போலீஸாரிடம் காவல் துறை உயா் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.