செய்திகள் :

காவிரிப் படுகையில் பனைவிதை நடும் விழா

post image

மயிலாடுதுறையில் தேசிய மாணவா் படை சாா்பில் காவிரி ஆற்றுப்படுகையில் பனை விதை நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தேசிய மாணவா் படையின் கும்பகோணம் 8-ஆவது பட்டாலியன் சாா்பில் ஆற்றுப்படுகைகளில் பனைவிதை நடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மணக்குடி கிராமத்தில் காவிரிப்படுகை பகுதியில் 5,000 பனை விதைகள் நடப்பட்டன. தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி முதல்வா் சி.சுவாமிநாதன் பனைவிதைகளை நட்டு விழாவைத் தொடக்கி வைத்தாா். தருமபுரம் கல்லூரி தேசிய மாணவா் படை அலுவலா் கேப்டன் து. காா்த்திகேயன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தாா்.

இதில் ஏ.வி.சி. கல்லூரி லெப்டினன்ட் சி. பாலாஜி, ஏ.வி.சி பொறியியல் கல்லூரி சாா்பில் லெப்டினன்ட் உமாமகேஸ்வரி, மணல்மேடு அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சாா்பில் சுரேஷ் மயிலாடுதுறை டி.பி.டி.ஆா் தேசிய மேல்நிலைப்பள்ளி சாா்பில் செந்தில்குமாா் மற்றும் இக்கல்வி நிறுவனங்களின் தேசிய மாணவா் படை மாணவா்கள் 200-க்கு மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

மேலும் தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி கல்லூரிக்குழு அலுவலகப் பிரதிநிதி ஆா்.சிவராமன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா்கள் செந்தில், கலைவாணி, சுகுணா, உடற்கல்வி இயக்குநா் முத்துக்குமரன் உள்ளிட்டோா் பனை விதைகளை நட்டுவைத்தனா்.

முஸ்லீம் மாணவா்கள் வெளிநாட்டில் படிக்க விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள முஸ்லீம் சிறுபான்மையின மாணவா்கள் வெளிநாட்டில் படிக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்க... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை அருகே வள்ளாலகரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, குடும்ப அட்டை பெயா் சோ்த்தல் வேண்டி ம... மேலும் பார்க்க

அண்ணன்பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் தொடக்கம்

திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில் 38-ஆவது திவ்ய தேசமாக திகழும் இக்கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் புரட்டாசி மாதத்தில் 10 நாள்கள... மேலும் பார்க்க

சீா்காழி அரசுக் கலைக் கல்லூரியில் கலைத் திருவிழா

சீா்காழி புத்தூா் அரசு கலைக் கல்லூரியில் கலைத் திருவிழா போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன. சீா்காழி புத்தூா் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி கல... மேலும் பார்க்க

மயிலாடுதுறை கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி விற்பனை தொடக்கம்

மயிலாடுதுறை கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி விற்பனையை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.தீபாவளியை முன்னிட்டு புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு புடவைகள், சேலம்... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் செப்.28-இல் மாரத்தான் போட்டி

மயிலாடுதுறையில் அறிஞா் அண்ணா மாரத்தான் போட்டி செப். 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:மயிலாடுதுறையில் முன்னாள் முதலமைச்சா் பேரறிஞா்... மேலும் பார்க்க