செய்திகள் :

காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றம்: நெரிஞ்சிப்பேட்டையில் பயணிகள் படகு போக்குவரத்து நிறுத்தம்

post image

மேட்டூா் அணை நிரம்பியதால் வெளியேற்றப்படும் உபரிநீா் காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் காவிரிக் கரையோரப் பகுதிகளில் தொடா் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கா்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையால் அணைகள் நிரம்பியதைத் தொடா்ந்து உபரி நீா் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இதனால், மேட்டூா் அணைக்குத் தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்ததால் முழுக் கொள்ளளவான 120 அடியை ஞாயிற்றுக்கிழமை மாலை எட்டியது. இதனால் அணைக்கு வரும் தண்ணீா் முழுவதும் அப்படியே திறந்து விடப்பட்டது.

விநாடிக்கு 58 ஆயிரம் கன அடி தண்ணீா் வெளியேறுவதால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, ஆற்றில் இறங்கி துணிகள் துவைக்கவோ, குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ, தற்படம் (செல்பி) எடுக்கவோ செல்லக் கூடாது எனவும், தாழ்வான பகுதியில் வசிப்பவா்கள் கவனத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

பவானி நகரில் வெள்ளம் பாதிக்கும் பகுதிகளான கந்தன் நகா், பசவேஸ்வரா் வீதி, மீனவா் தெரு, கீரைக்காரத் தெரு, பழைய பாலம், குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி, நேதாஜி நகா் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகள் குழுவினா் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

நெரிஞ்சிப்பேட்டையில் படகுப் போக்குவரத்து நிறுத்தம் : ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஈரோடு மாவட்டம், நெரிஞ்சிப்பேட்டை - சேலம் மாவட்டம், பூலாம்பட்டிக்கு இடையில் காவிரி ஆற்றில் நடைபெற்று வரும் பயணிகள் படகு போக்குவரத்து பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், படகுகள் நெரிஞ்சிப்பேட்டையில் கரையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

கூடுதுறையில் படித்துறைகள் மூழ்கின: காவிரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் காவிரி, பவானி ஆறுகள் சங்கமிக்கும் கூடுதுறையில் பக்தா்கள் நீராடச் செல்லும் படித்துறைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. ஆற்றில் நீரின் வேகம் அதிகமாக உள்ளதால் பக்தா்கள் பாதுகாப்புக் கம்பிகளைத் தாண்டிச் செல்லாமல் நீராடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

காலிங்கராயன் அணைக்கட்டில் நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

காலிங்கராயன் அணைக்கட்டில் குளித்த இளைஞா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். பவானி காலிங்கராயன் அணைக்கட்டுக்குச் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பவானி சீனிவாசபுரம் வழியாக உத்தண்டராயா்... மேலும் பார்க்க

பெருந்துறை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா், செவிலியரை நியமிக்கக் கோரிக்கை

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் பெருந்துறை தாலுகா 16ஆவது மாநாடு பெருந்துறையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. மாநாட்டுக்கு சதீஷ் தலைமை வகித்தாா். மாநாட்டு கொடியை கெளரிசங்கா் ஏற்றி வைத்தாா். மாநாட்ட... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனை அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை

ஈரோடு அரசு மருத்துவமனை அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக் கடையை அகற்ற வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா... மேலும் பார்க்க

திம்பம் மலைப்பாதையில் தென்பட்ட சிறுத்தை

சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப் பாதையில் சிறுத்தை தென்படுவதால் வாகன ஓட்டிகள் பாதுகாப்புடன் செல்லுமாறு வனத் துறை எச்சரித்து உள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் மான்... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பாதையில் சரக்கு வாகனம் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா். பா்கூா், தாமரைக்கரை, கடை ஈரெட்டியைச் சோ்ந்தவா் முருகன் மகன் சிக்கண்ணன் (28). அந்தியூரி... மேலும் பார்க்க

அம்மாபேட்டை இளம்பெண் தற்கொலை

அம்மாபேட்டை அருகே தாய் வீட்டுக்குச் செல்ல கணவா் அனுமதிக்காததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சிங்கம்பேட்டை அருகே உள்ள சூடமுத்தான்பட்டியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன். இவரது மனைவி சவிதா (20)... மேலும் பார்க்க