செய்திகள் :

காஸா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: 50-க்கும் மேற்பட்டோர் பலி!

post image

காஸா மீது நள்ளிரவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 55 பேர் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ள இஸ்ரேலியர்களை விடுவித்து, காஸாவை விட்டு வெளியேறும் வரை போரை மேலும் தீவிரப்படுத்துவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஒரு மாதத்திற்கும் மேலாக காஸாவுக்குச் செல்லும் உணவு, எரிபொருள், உதவிகள் ஆகியவற்றை இஸ்ரேல் தடுத்தி நிறுத்தி வைத்துள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேல் நேற்று நள்ளிரவில் காஸாவில் நடத்திய தாக்குதலில் 50-க்கும் மேற்பட்டோர் பலியானதாகக் கூறப்படுகிறது. இதில், பலரும் காயமடைந்துள்ளனர்.

ஹமாஸ் படையினருக்கு அழுத்தம் கொடுப்பதற்காக காஸாவில் புதிய பாதுகாப்பு பகுதிகளை உருவாக்கி, தெற்கு நகரமான ரஃபாவை முழுவதும் பாலஸ்தீனத்திடமிருந்து பிரிக்கப் போவதாகவும் இதன்மூலம் மட்டுமே பணயக் கைதிகளை அவர்கள் விடுவிப்பார்கள் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

முன்னதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில்,”இஸ்ரேல் ராணுவம் காஸாவில் தாக்குதல் நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளது. அங்குள்ள முக்கிய பகுதிகளில் இருந்து பயங்கரவாதக் கட்டமைப்புகளை அகற்றி அந்தப் பகுதிகளைக் கைப்பற்ற இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பின்னா் அவை இஸ்ரேல் பாதுகாப்புப் பகுதிகளாக இணைத்துக்கொள்ளப்படும்.

காஸாவில் போா் நிறுத்தம் முறிந்த பின்னர் சண்டை நடைபெற்றுவரும் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற வேண்டும்.

அதுமட்டுமின்றி, பொதுமக்கள் இணைந்து உடனடியாக ஹமாஸ் படையினரை அதிகாரத்தில் இருந்து அகற்றி அவா்களால் கடத்திவரப்பட்ட பணயக் கைதிகள் அனைவரையும் இஸ்ரேலிடம் ஒப்படைக்க வேண்டும். இது மட்டுமே இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவரும்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

பாலஸ்தீன பணயக் கைதிகளை இஸ்ரேல் விடுவித்தால் தங்களிடம் உள்ள 59 பணயக் கைதிகளை விடுவிப்பதாக ஹமாஸ் முன்பு கூறியிருந்தது. அவர்களில் 24 பேர் மட்டுமே தற்போது உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால், ஹமாஸ் தங்களின் ஆயுதங்களை ஒப்படைத்து, காஸாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற இஸ்ரேலின் கோரிக்கையை அவர்கள் நிராகரித்தனர்.

இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 50,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | இஸ்ரேல் பிரதமரின் வருகை! சர்வதேச நீதிமன்றத்திலிருந்து வெளியேறும் ஹங்கேரி!

உடல்நிலை தேறிய பின் முதல்முறையாக மக்களைச் சந்தித்தார் போப் பிரான்சிஸ்!

ரோம்: உடல்நிலை தேறிய பின் பொதுவெளியில் முதல்முறையாக போப் பிரான்சிஸ் மக்களை சந்தித்தார்.நிமோனியாவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ்(88) கடந்த மார்ச் 23-ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து வாடி... மேலும் பார்க்க

அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கை பொருளாதார சர்வாதிகாரத்தனம்! -சீனா கடும் விமர்சனம்

அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு சீனா கடும் எதிர்வினையாற்றியுள்ளது. ஏப்ரல் 2-ஆம் தேதிமுதல், அமெரிக்க பொருள்களுக்கு எந்தெந்த நாடுகளில் எந்தளவுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதோ அதேபாணியில், அமெரிக... மேலும் பார்க்க

ஜப்பானில் மருத்துவப் போக்குவரத்து ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து!

ஜப்பானில் மருத்துவ உதவிக்குப் பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். நாகாசாகி விமான நிலையத்திலிருந்து ஃபுகுவோகா பகுதிக்கு நோயாளி ஒருவரை ஏற்றிச்சென்ற மர... மேலும் பார்க்க

அணுசக்தி ஒப்பந்தம் மிரட்டும் அமெரிக்கா: என்ன செய்யும் ஈரான்?

-சந்தோஷ் துரைராஜ்-அணு ஆயுதங்கள் பயன்பாட்டை தடுக்கும் வகையில், அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் முன்னெப்போதும் பாா்த்திராத வகையில், ஈரான் மீது குண்டு வீசப்படும் என்றும், ஈரானுடன் வா... மேலும் பார்க்க

மியான்மா் நிலநடுக்கம்: இந்தியா கூடுதல் நிவாரண உதவி!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மா் நாட்டுக்கு சி-17 விமானம் மூலம் கூடுதலாக 31 டன்கள் நிவாரண பொருள்களை இந்தியா ஞாயிற்றுக்கிழமை அனுப்பியது. உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாதில் உள்ள ஹிண்டன் விமான தளத்... மேலும் பார்க்க

காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: 15 போ் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 15 போ் உயிரிழந்தனா். காஸாவில் போா் புரிந்து வரும் ஹமாஸ் அமைப்பு உடனான போா் நிறுத்த ஒப்பந்தத்தை கடந்த மாதம் முறித்த இஸ்ரேல், காஸாவில் வான் மற்றும் தரைவழித் தாக்க... மேலும் பார்க்க