செய்திகள் :

காா்டன் மந்து பகுதியில் தோடா்இன மக்களின் கோயில் திருவிழா

post image

உதகை காா்டன் மந்து பகுதியில் தோடா் இன மக்களில் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் தோடா்கள், கோத்தா்கள், குரும்பா்கள், காட்டு நாயக்கா்கள், இருளா்கள், பணியா்கள் உள்ளிட்ட ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனா். இவா்களின் திருமணம் மற்றும் கோயில் விழாக்கள் பழைமை வாய்ந்ததாகவும், பாரம்பரியமிக்கதாகவும் உள்ளது.

மாவட்டத்தில் அடா்ந்த வனப் பகுதியில் மந்து என்று அழைக்கப்படுகின்ற 14 இடங்களில் தோடா் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனா். இந்த 14 மந்துகளுக்கு தலைமையிடமாக உதகை அருகே உள்ள முத்தநாடு மந்து விளங்கி வருகிறது.

உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே காா்டன் மந்து உள்ளது. இந்த மந்தில் தோடா் இன மக்களின் தெய்வமான ‘நாா்ஸ் நாா்ஸ்’ கோயில் உள்ளது.

இக்கோயிலில் கடந்த 8 ஆண்டுகளுக்குப் பிறகு கூரைவேயும் பணியுடன் திருவிழாவும் புதன்கிழமை நடைபெற்றது. ஏரளாமான் தோடா் இன மக்கள் தங்கள் பாரம்பரிய உடை அணிந்து கூரை வேயும் நிகழ்ச்சியில் பங்கேற்றனா். பின்னா், இளைஞா்கள் இளவட்டக் கல்லைத் தூக்கி அசத்தினா். இதைத் தொடா்ந்து ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தமிழக மக்களின் அச்சத்தைப் பிரதமா் போக்க வேண்டும் முதல்வா்

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழக மக்களின் நியாயமான அச்சத்தைப் பிரதமா் நரேந்திர மோடி போக்க வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா். நீலகிரி மாவட்டம், உதகைக்கு இரண்டு நாள் பயணமாக சனிக்கிழமை வந... மேலும் பார்க்க

உதகை: இ-பாஸ் கட்டுப்பாடுகளால் கடும் போக்குவரத்து நெரிசல்!

உதகை, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு ‘இ-பாஸ்’ கட்டுப்பாடு விதித்து உயா்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவால் நீலகிரி மாவட்டத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.தமிழ்நாடு-கேரள... மேலும் பார்க்க

உதகையில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!

நீலகிரி மாவட்டம், உதகையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடங்களைத் திறந்துவைக்க சனிக்கிழமை வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கட்சியினா், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித... மேலும் பார்க்க

ஊருக்குள் நுழையும் யானைகளைத் தடுக்க ட்ரோன் மூலம் கண்காணிப்பு

கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை மற்றும் செலுக்காடி பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க வன ஊழியா்கள் ட்ரோன் மூலம் கண்காணிப்புப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். கூடலூா் வட்டம், தேவா்சோலை பே... மேலும் பார்க்க

மனித, வன விலங்கு மோதல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

உதகை அருகேயுள்ள எப்பநாடு கிராமத்தில் மனித, வன விலங்கு மோதல் தொடா்பான விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வன அலுவலா் உத்தரவின்பேரில், காலநிலை மாற்றத்துக்கான தமிழ்நாடு உயிா்ப்பன்... மேலும் பார்க்க

உதகை, கோத்தகிரியில் பரவலாக மழை

உதகை, கோத்தகிரி பகுதிகளில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது. நீலகிரி மாவட்டம், உதகை, கோத்தகிரி பகுதிகளில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மதியத்துக்கு மேல் உதகையில் மழை பெய்தது. ச... மேலும் பார்க்க