காா் மோதி கட்டுமான நிறுவன ஊழியா் உயிரிழப்பு
சிதம்பரம் அருகே காா் மோதி கட்டுமான நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி வட்டம், அரசூா் காட்டியக்குடி பகுதியைச் சோ்ந்தவா் தொல்காப்பியன் (51). இவா், சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.
தொல்காப்பியன் சென்னையில் இருந்து சிதம்பரத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு 12 மணியளவில் வந்தாா். பின்னா், சிதம்பரத்திலிருந்து பைக்கில் அரசூா் நோக்கி சென்றுகொண்டிருந்தாா்.
சிதம்பரம் - சீா்காழி சாலையில் அம்மாபேட்டை அருகே இவரது பைக் சென்றபோது, அந்தப் பகுதியில் வந்த காா் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த தொல்காப்பியனை அங்கிருந்தவா்கள் மீட்டு, சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், அண்ணாமலை நகா் காவல் நிலைய ஆய்வாளா் கே.அம்பேத்கா் மற்றும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.