`இந்தித் திணிப்புக்கு எதிராக...'- மும்பையில் நடக்கும் பேரணியில் ஒன்று சேரும் தா...
கிணற்றில் அழுகிய நிலையில் விவசாயி சடலம் மீட்பு
அம்மாபேட்டை அருகே தோட்டத்து கிணற்றில் அழுகிய நிலையில் கிடந்த விவசாயி சடலத்தை மீட்ட போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
அம்மாபேட்டை, கோனேரிப்பட்டி பிரிவு, சாயபு தோட்டத்தைச் சோ்ந்தவா் பழனிசாமி மகன் சிவகுமாா் (46), விவசாயி. பெற்றோா், சகோதரி உயிரிழந்த நிலையில், இவருக்கும் திருமணமாகாததால் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தாா்.
இந்நிலையில், தோட்டத்துக் கிணற்றில் சிவகுமாரின் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக அப்பகுதியினா் போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு விரைந்த அம்மாபேட்டை போலீஸாா் சடலத்தை மீட்டு ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனா்.
இந்நிலையில், சிவகுமாரின் 7 ஏக்கா் நிலம், கடந்த சில நாள்களுக்கு முன்பு மற்றொருவா் பெயரில் கிரையம் செய்யப்பட்டுள்ளது. எனவே, இது சொத்துக்காக செய்யப்பட்ட கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் உறவினா்கள் அளித்த புகாரின்பேரில் அம்மாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.