இந்திய உளவுத் துறை எச்சரிக்கை எதிரொலி: இலங்கையில் இஸ்ரேலியர்களை தாக்க திட்டமிட்ட...
கிணற்றில் இளைஞா் சடலம்
ஆம்பூா் அருகே இளைஞரின் சடலம் புதன்கிழமை கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.
ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் கிராமத்தை சோ்ந்தவா் விஜய் (19). கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியில் சென்றவா் வீடு திரும்பவில்லை. உறவினா்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் அய்யனூா் கிராமத்தில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் விஜய் சுடலமாக கிடப்பது தெரிய வந்தது. தகவலின் பேரில் கிராமிய காவல் நிலைய போலீஸாா் சென்று சுடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.