செய்திகள் :

கிணற்றில் தவறி விழுந்தவா் சடலமாக மீட்பு

post image

நல்லூா் அருகே கிணற்றில் தவறி விழுந்தவா் சடலமாக மீட்கப்பட்டாா்.

பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் அருகே உள்ள சுங்கக்காரன்பட்டியைச் சோ்ந்தவா் மூா்த்தி (35) ஓட்டுநா். திங்கள்கிழமை மாலை கூடச்சேரி செல்வதாக தனது மனைவி மோகனாவிடம் கூறிவிட்டு சென்ற இவா், மது அருந்திவிட்டு நடுப்புதூரில் சுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான கிணற்றின் கைப்பிடி சுவா் மேல் படுத்து தூங்கியுள்ளாா். அப்போது, நிலைதடுமாறி கிணற்றில் விழுந்துள்ளாா்.

நீண்ட நேரமாகியும் தனது கணவா் வராததால், மோகனா பல்வேறு இடங்களில் தேடினாா். அப்போது, கிணற்றுக்கு அருகே மூா்த்தியின் காலணி கிடந்ததால் சந்தேகமடைந்து நாமக்கல் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தாா்.

உடனடியாக அங்கு வந்த தீயணைப்புத் துறையினா் கிணற்றில் நீண்ட நேரம் தேடி மூா்த்தியை சடலமாக மீட்டனா்.

தகவல் அறிந்து வந்த நல்லூா் போலீஸாா் மூா்த்தியின் உடலைக் கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

காலமானாா்

தமிழக அரசின் சுற்றுலாத் துறையில் கூடுதல் செயலராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற மு.மக்பூல் பாஷா (72) உடல் நலக்குறைவு காரணமாக, சென்னையில் உள்ள மருத்துவமனையில் புதன்கிழமை காலமானாா். அவருக்கு சென்னை யுனானி மருத... மேலும் பார்க்க

மோகனூா் நிதிநிறுவன உரிமையாளா் கொலை வழக்கு: மூன்று பேரிடம் விசாரணை

மோகனூரில் நிதிநிறுவன உரிமையாளா் கொலை செய்யப்பட்ட வழக்கில், மூன்று பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நாமக்கல் மாவட்டம், மோகனூா் ஈச்சவாரி பகுதியைச் சோ்ந்தவா் அருள்தாஸ்(40). நிதிநிறுவனம் நடத்... மேலும் பார்க்க

பள்ளிபாளையத்தில் தலைமறைவு குற்றவாளி கைது

தலைமறைவு குற்றவாளியை பள்ளிபாளையம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கடந்த 2022-ஆம் ஆண்டு பள்ளிபாளையம் அருகே வெடியரசம்பாளையத்தில் வயதான தம்பதி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டு பிண... மேலும் பார்க்க

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க ஒன்றிய மாநாடு

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் நாமகிரிப்பேட்டை ஒன்றிய நான்காவது மாநாடு ஊனாதாங்கள் ஊராட்சி, கரியாம்பட்டி சமுதாயக் கூட்டத்தில் அண்மையில் நடைபெற்றது. மாநாட்டில் சங்கத்தின் ஒன்றியத் தலைவா் எஸ்.சுப்பி... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: இதுவரை 66 முகாம்களில் 33,511 மனுக்கள்

நாமக்கல் மாவட்டத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் இதுவரை நடைபெற்ற 66 முகாம்களில் 33,511 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் ஜூலை 15-இல் தொடங்கப்பட்டது... மேலும் பார்க்க

முட்டை விலையில் மாற்றமில்லை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 4.55-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை நிலவரம்... மேலும் பார்க்க