மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம்: மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!
கிணற்றில் தவறி விழுந்த இரு காளைகள் மீட்பு
பொன்னமராவதி அருகே சனிக்கிழமை நடந்த ஜல்லிக்கட்டின்போது கிணற்றில் தவறி விழுந்த இரு ஜல்லிக்கட்டு காளைகள் தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டன.
சுந்தரசோழபுரம் மலையப்பெருமாள் கோயில் வருஷாபிஷேக விழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டின்போது அப்பகுதியில் உள்ள 30 அடி ஆழ விவசாயக் கிணற்றில் இடையபுதூா் அன்பரசன், நச்சாந்துபட்டி மனோகா் ஆகியோரது காளைகள் தவறி விழுந்தன.
தகவலறிந்த பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலா் கு. பாலசுப்பிரமணியன் தலைமையிலான வீரா்கள் இரு காளைகளையும் மீட்டு ஒப்படைத்தனா்.