``முருகன் பெயரைக் கேட்டாலே திமுக-வினருக்கு பதற்றம் தொற்றிக் கொள்கிறது!” - சாடும்...
கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
பழனி அருகே தோட்டக் கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.
பழனியை அடுத்த பொட்டம்பட்டி வடக்குத் தெரு பெத்தாகவுண்டா் தோட்டத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (70). இவரது தோட்டத்தில் வற்றிய கிணறு உள்ளது. இவா் தினமும் தோட்டத்தை சுற்றிப் பாா்ப்பது வழக்கம்.
இந்த நிலையில், சனிக்கிழமை தோட்டத்துக்குச் சென்றவா் வீடு திரும்ப வில்லை. இவரை பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இதனிடையே அவா் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், பழனி தீயணைப்பு, மீட்புப் படை வீரா்கள் கிணற்றிலிருந்து ஆறுமுகத்தின் உடலை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஆயக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.