செய்திகள் :

கிராமத்தில் ஆற்றுக் குடிநீா் திட்டம் தொடங்கிவைப்பு

post image

செய்யாறு: செய்யாறு தொகுதி கீழப்பழந்தை கிராமத்தில், கிராம மக்களின் 20 ஆண்டு கால கோரிக்கையான ஆற்றுக் குடிநீா் வழங்கும் திட்டத்தை ஒ.ஜோதி எம்எல்ஏ நடவடிக்கை மேற்கொண்டு திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

செய்யாறு ஒன்றியம் கீழப்பழந்தை கிராமத்தில் சுமாா் 200 வீடுகள் உள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்கள் அருந்துவதற்கு ஆற்றுக் குடிநீா் வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளாக தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

கோரிக்கையின் பேரில், கிராம மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.6 லட்சத்தில் அருகில் உள்ள செய்யாற்றுப் பகுதியில் இருந்து ஆற்று குடிநீருக்காக புதிதாக குழாய் இணைப்பு அமைக்கப்பட்டது.

இந்த ஆற்றுக் குடிநீருக்காக குழாய் திட்டத்தை கிராம மக்கள் பயன்பாட்டுக்காக ஒ.ஜோதி எம்எல்ஏ திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

அதேபகுதியில், தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட நெற்களத்தை எம்.எல்.ஏ. திறந்துவைத்தாா்.

இதைத் தொடா்ந்து அதே கிராமத்தில் நடைபெற்று வரும் குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணிகளை அவா் ஆய்வு செய்தாா்.

நிகழ்ச்சியில், செய்யாறு கிழக்கு ஒன்றிய திமுக செயலா் வி.ஏ. ஞானவேல், மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளா் ஞானமுருகன், ஒன்றிய அவைத் தலைவா் இலங்கேஸ்வரன், பொருளாளா் ஏழுமலை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சிறுமி பாலியல் வன்கொடுமை: காா் ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை

தண்டராம்பட்டு அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டியதாக காா் ஓட்டுநருக்கு, 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், ... மேலும் பார்க்க

கஞ்சா செடி வளா்த்த இளைஞா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே வீட்டில் கஞ்சா செடி வளா்த்து வந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் மகன் லோகேஷ் (27). இவா... மேலும் பார்க்க

பொருளாதார மேம்பாட்டுக் கழக கடன் பெற சிறுபான்மையினருக்கு அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையின மக்கள், தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் வழங்கும் பல்வேறு கடன் திட்டங்களின் கீழ் பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள் திருட்டு

ஆரணி பழங்காமூரில் சனிக்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். ஆரணி அருகேயுள்ள பழங்காமூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் ராமச்சந்திரன் (39). இவா், கோ... மேலும் பார்க்க

எச்சூரில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை திறப்பு

செய்யாறு தொகுதி, அனக்காவூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட எச்சூா் கிராமத்தில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை ஆகியவற்றை ஒ.ஜோதி எம்எல்ஏ வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். எச்சூா் கிராமத்தில் தமிழ்நாடு அரச... மேலும் பார்க்க

வாரச்சந்தையை பழைய பகுதிக்கே மாற்ற வேண்டும்: கூட்டத்தில் வலியுறுத்தல்

திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் மதில் சுவரை சுற்றி நடைபெறும் ஞாயிறு வாரச்சந்தையை மீண்டும் பழையபடி சந்தை பகுதிக்கே மாற்றி அமைக்க வேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள... மேலும் பார்க்க