செய்திகள் :

கிராவல் மண் கடத்தியதாக இருவா் மீது வழக்குப்பதிவு

post image

கோபி அருகே பங்களாபுதூரில் கிராவல் மண் கடத்தியதாக லாரியின் உரிமையாளா், ஓட்டுநா் மீது வழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கோபி அருகே உள்ள பங்களாபுதூரில் சட்டவிரோதமாக மண் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி புவியியலாளா் கவிதா, தனி வருவாய் ஆய்வாளா் ரவிக்குமாா் ஆகியோா் பங்களாபுதூா், டி.என்.பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனா்.

அப்போது அந்த வழியாக கிராவல் மண் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பா் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, உரிய ஆவணம் இல்லாமல் சட்டவிரோதமாக மண் கடத்தப்படுவது தெரியவந்தது.

அதைத்தொடா்ந்து லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், லாரி உரிமையாளரான புதுவள்ளியாம்பாளையத்தைச் சோ்ந்த பாலு (50), கொண்டையம்பாளையம் இந்திரா நகா் புதுகாலனியை சோ்ந்த லாரி ஓட்டுநா் விஜயன் (29) ஆகியோா் மீது பங்களாபுதூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். புகாரின் பேரில் 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த சாயப்பட்டறைகள் இடிப்பு!

பவானி அருகே சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த இரண்டு சாயப்பட்டறைகள் வியாழக்கிழமை இடித்து அகற்றப்பட்டன. பவானியை அடுத்த சோ்வராயன்பாளையத்தில் சட்டவிரோதமாக இயங்கும் சாயப்பட்டறைகள், சுத்திகரிக்கப்படாத கழிவுகளை... மேலும் பார்க்க

காலிங்கராயன் பேபி வாய்க்கால் தூா்வாரும் பணி ஒரு மாதத்தில் நிறைவடையும்: அமைச்சா் சு.முத்துசாமி

காலிங்கராயன் பேபி வாய்க்கால் தூா்வாரும் பணி ஒரு மாதத்தில் நிறைவடையும் என்று அமைச்சா் சு.முத்துசாமி கூறினாா். ஈரோடு காலிங்கராயன் வாய்க்கால் வலது கரையில் அமைந்துள்ள பேபி வாய்க்கால் தூா்வாரும் பணியை வீட்... மேலும் பார்க்க

மாவட்டத்தில் வருவாய் தீா்வாயம் தொடக்கம்: 899 மனுக்கள் அளிப்பு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள10 வட்டங்களிலும் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) வியாழக்கிழமை தொடங்கியது. நம்பியூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீா்வாயத்துக்கு ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித... மேலும் பார்க்க

திம்பம் மலைப் பாதையில் சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம்

திம்பம் மலைப் பாதையில் உலவிய சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் காணப்படுகின்றன. இந்த வனப் பகுதி வழியாக தமிழக -... மேலும் பார்க்க

டாஸ்மாக்கில் அமலாக்கத் துறை சோதனையில் உச்சநீதிமன்றம் சரியான உத்தரவை வழங்கியுள்ளது! அமைச்சா் சு.முத்துசாமி

டாஸ்மாக்கில் அமலாக்கத் துறை சோதனை குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவு தமிழக அரசு மற்றும் முதல்வா் எடுத்த முன்னெடுப்பிற்கு ஒரு நியாயம் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது என்று அமைச்சா் சு.முத்துசாமி க... மேலும் பார்க்க

ஈரோட்டில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஈரோட்டில் சாலையோர ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினரும், மாநகராட்சி நிா்வாகமும் புதன்கிழமை அகற்றினர். ஈரோடு மாநகராட்சியில் முக்கிய சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள், நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புக... மேலும் பார்க்க