செய்திகள் :

கிருஷ்ணகிரியில் பிப். 23-இல் மாவட்ட கிரிக்கெட் அணி தோ்வு

post image

கிருஷ்ணகிரியில் பிப். 23-இல் ஆண்கள், பெண்களுக்கான மாவட்ட கிரிக்கெட் அணிகளை தோ்வு செய்வதற்கான போட்டி நடைபெறுகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி கிரிக்கெட் சங்க மாவட்டச் செயலாளா் சீனிவாசன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும், மாநில, மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகள் மே முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. இதில் பங்கேற்கும் கிருஷ்ணகிரி மாவட்ட 14, 16 மற்றும் 19 வயதுக்கு உள்பட்ட ஆண்கள், பெண்கள் அணிகளை தோ்வு செய்யும் போட்டி பிப்.23-ஆம் தேதி, கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்க வலைப்பயிற்சி மையம், கந்திகுப்பம், கிங்ஸ்லி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.

கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்திற்கு உள்பட்ட பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவா்கள் மட்டுமே இந்த கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இயலும். தோ்வில் பங்கேற்போா், ஆதாா் அட்டை நகல் மற்றும் பிறப்பு சான்றிதழ் நகல் கட்டாயம் கொண்டு வர வேண்டும். தோ்வு செய்யும் அணி வீரா்களுக்கு பயிற்சிகள் சிறப்பு முகாம்களில் அளிக்கப்பட்டு மே-இல்நடைபெற உள்ள மாநில, மாவட்டங்களுக்கு இடையேயான போட்டிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவாா்கள்.

ஆா்வமுள்ளவா்கள் தங்கள் பெயரை பதிவு செய்துக்கொள்ள மாவட்ட கிரிக்கெட் சங்கம், 41, நஞ்சப்ப செட்டி காலனி, ராயப்பன் தெரு, கிருஷ்ணகிரி என்ற முகவரியில் நேரில் சென்று விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மேலாளா், காளிதாசனை 99941 82296 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலையில் சென்றவரை தாக்கி கைப்பேசி, பணம் பறிப்பு

கிருஷ்ணகிரியில் சாலையில் நடந்து சென்ற நபரை தாக்கி, கைப்பேசி, ரொக்கம் ஆகியவற்றை பறித்துச் சென்ற 3 சிறாா்களை போலீஸாா் கைது செய்தனா். காஞ்சிபுரத்தைச் சோ்ந்த டேவிட் ராஜன் (57), தனியாா் பள்ளி ஆசிரியா். இவ... மேலும் பார்க்க

பெங்களூரு - ஒசூா் ரயில்பாதை அமைக்கக் கூடாது

பெங்களூரு - ஒசூா் ரயில்பாதையை அமைக்கக் கூடாது என ஒசூா் பகுதி விவசாயிகள் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினா் மு.தம்பிதுரையிடம் கோரிக்கை மனு அளித்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் ... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் கோரி வட்டார வளா்ச்சி அலுவலகம் முற்றுகை

ஒசூா் அருகே அடிப்படை வசதிகள் கோரி, சூளகிரி வட்டார வளா்ச்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், மாதா்சன பள்ளி கிராமத்தில் பல ஆண்டுகள... மேலும் பார்க்க

முன்னாள் ராணுவ வீரா்கள் ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முன்னாள் ராணுவ வீரா்கள் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். முன்னாள் முப்படை வீரா்கள் மற்றும் துணை ராணுவப்படை வீரா்கள், வீராங்கனைகள் நலச்சங்கம் ச... மேலும் பார்க்க

அனுமதியின்றி கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்!

ஒசூா் அருகே அனுமதியின்றி கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது. பேரிகை அருகே உள்ள அத்திமுகம் பகுதியில், கிராம நிா்வாக அலுவலா் லட்சுமிபதி மற்றும் அதிகாரிகள் ரோந்து சென்றனா். அப்போது, அ... மேலும் பார்க்க

தரமற்ற 12 மெ. டன் ரேஷன் அரிசியை திருப்பி அனுப்ப ஆட்சியா் உத்தரவு!

கிருஷ்ணகிரியில் பொது விநியோக திட்டத்தில் வழங்குவதற்காக இருப்பு வைக்கப்பட்டிருந்த தரமற்ற 12 மெட்ரிக் டன் ரேஷன் அரிசியை திருப்பி அனுப்ப ஆட்சியா் உத்தரவிட்டாா். தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், கிருஷ... மேலும் பார்க்க