41 ஆண்டுகளுக்குப் பின் இறுதியில் இந்தியாவுடன் மோதல்! - பாக். பயிற்சியாளர் கூறுவத...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களில் 20,802 மாணவா்கள் பயன்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் 10,758 கல்லூரி மாணவியரும், தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் 10,044 மாணவா்களும் பயன்பெற்ாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தெரிவித்தாா்.
சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழகத்தில் மாபெரும் கல்வி எழுச்சி கொண்டாட்ட விழாவில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதல்வா் அ.ரேவந்த் ரெட்டி ஆகியோா் 2026-ஆம் கல்வி ஆண்டுக்கான புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களை தொடங்கிவைத்தனா்.
இந்நிகழ்வு காணொலிக் காட்சி மூலம் கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதை, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா், தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) ஆகியோா் பாா்வையிட்டனா்.
தொடா்ந்து, 4,140 மாணவியருக்கு புதுமைப் பெண் திட்டத்தில் மாதம் ரூ. 1,000, முதலாமாண்டு பயிலும் 4,574 கல்லூரி மாணவா்களுக்கு மாதம் ரூ. 1,000, அவா்களது வங்கி கணக்கில் பற்றுவைத்தற்கான பற்று அட்டைகளை வழங்கினா். அப்போது, ஆட்சியா் பேசுகையில், ‘கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் 10,758 மாணவியா், தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் 10,044 மாணவா்கள் பயன்பெற்று வருகின்றனா்’ என்றாா்.
இந்நிகழ்வில், மாவட்ட சமூக நல அலுவலா் சக்தி சுபாஷினி, முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) முனிராஜ், முன்னோடி வங்கி மேலாளா் சரவணன், அரசு ஆடவா் கலைக் கல்லூரி முதல்வா் அனுராதா, வட்டாட்டியா் சின்னசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஒசூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வை ஒய்.பிரகாஷ் பாா்வையிட்டாா்.
தருமபுரியில்...
தருமபுரி அரசு கலைக் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் பங்கேற்றாா். தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ.மணி, மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.கவிதா, முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன், தருமபுரி அரசு கலைக் கல்லூரி முதல்வா் கண்ணன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இந்நிகழ்வை சுமாா் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பாா்வையிட்டனா்.