செய்திகள் :

கிளாம்பாக்கத்தில் ஓடும் ஆட்டோவில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்!

post image

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் நின்றிருந்த 18 வயது மேற்கு வங்க சிறுமி ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுநர் உள்பட மூன்று பேரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

பெண்ணை ஆட்டோ ஓட்டுநர் கடத்திச் செல்வதை அறிந்த அப்பகுதியில் இருந்த சிலர், உடனடியாகக் காவல்துறைக் கட்டுப்பாட்டு மையத்துக்கு தொடர்புகொண்டு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் விரட்டிச் சென்றதால், பெண்ணை பாதி வழியில் இறக்கிவிட்டு குற்றவாளிகள் தப்பிச் சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து தாம்பரம் காவல்துறை ஆணையர் கூறுகையில், அந்தச் சிறுமி மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். சேலத்தில் பணியாற்றி வந்துள்ளார். மாதவரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வருவதற்காக சேலத்திலிருந்து திங்கள்கிழமை சென்னைக்குப் பேருந்தில் வந்துள்ளார். திங்கள்கிழமை இரவு அந்தப் பேருந்து கிளாம்பாக்கம் வந்துள்ளார். பேருந்து நிலையத்துக்கு வெளியே மாதவரம் செல்லும் பேருந்துக்காகக் காத்திருந்த போது, அங்கு வந்த ஆட்டோ ஓட்டுநர், மாதவரத்தில் விட்டுவிடுவதாகக் கூறியிருக்கிறார். ஆனால், அப்பெண் மறுத்துவிட்டதால், ஆட்டோ ஓட்டுநர், அப்பெண்ணை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றிச் சென்றிருக்கிறார்.

ஆட்டோ சிறிது தொலைவு சென்றதும், மேலும் சிலரும் ஆட்டோவில் ஏறியிருக்கிறார்கள். அவரது கழுத்தில் கத்தியை வைத்து, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர்.

ஆட்டோ ஜிஎஸ்டி சாலை மற்றும் இரும்புலியூர் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, பெண்ணிக் அலறல் சப்தம் கேட்ட அப்பகுதியினர், காவல்துறை கட்டுப்பாட்டு மையத்துக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

உடனடியாக விரைந்து சென்ற காவல்துறை வாகனம், ஆட்டோவை விரட்டிச் சென்ற போது, நெற்குன்றம் அருகே ஆட்டோவை நிறுத்தி அப்பெண்ணை இறக்கிவிட்டுவிட்டு அவர்கள் தப்பியோடியுள்ளனர். மூவரையும் தேடும் பணி நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

சாராய விற்பனையைத் தட்டிக்கேட்ட இரு இளைஞர்கள் படுகொலை

மயிலாடுதுறையில் சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட இளைஞர்களை சாராய வியாபாரிகள் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில் ராஜ்குமார், தங்கதுரை, மூ... மேலும் பார்க்க

சிறந்த முதல்வர்கள் பட்டியலில் முதல்வர் ஸ்டாலின் சரிவு: அண்ணாமலை

திமுகவின் வாக்கு வங்கி குறைந்து வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.கோவை தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்த 58 பேருக்கும் 27-ஆம் ஆண்டு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரம் தபால் ந... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்தில் 85 அரசுப் பள்ளிகளை மூடும் திமுக அரசு: எல்.முருகன் கண்டனம்

நீலகிரி மாவட்டத்தில் 85 அரசு பள்ளிகளை இழுத்து மூடும் நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொண்டு வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், நீலகிர... மேலும் பார்க்க

திமுக முழுவதும் ஜாமீன் வாங்கிய அமைச்சர்கள்தான் இருக்கிறார்கள்: செல்லூர் ராஜு

அதிமுகவில் எந்த பிளவும் இல்லை என்று செய்தியாளர் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.மதுரை மாவட்டம் பரவை அருகே சத்தியமூர்த்தி நகர் பகுதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டடத் திறப்பு... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பவன் கல்யாண் தரிசனம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சுவாமி தரிசனம் செய்தார். ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன்கல்யாண் அவரது மகன் அகிராநந்தன் உள்ளிட்டோருடன் ... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயில் பெயரில் போலி இணையதளம்! கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

காரைக்கால் திருநள்ளாறில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தின் பெயரில் போலி இணையதளம் மூலம் பக்தர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட கோவில் அர்ச்சகர் மற்றும் பெங்களூருவைச் சேர... மேலும் பார்க்க