செய்திகள் :

கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் தாமதம்! எஸ்இடிசி விளக்கம்

post image

சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்துகளின் தாமதத்துக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்தது.

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பேருந்துகளுக்காக பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பதாக சமீபத்தில் அதிகளவில் புகார்கள் எழுந்தன.

இந்த நிலையில், மதுராந்தகம் - மேல்வருவத்தூர் இடையே நடக்கும் பாலப் பணிகளால்தான், சென்னைக்கு பேருந்துகள் வருவதில் தாமதம் ஏற்பட்டு, கிளாம்பாக்கத்தில் பயணிகளின் கூட்டத்துக்கு காரணம் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் பதிலளித்துள்ளது.

சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு போதிய எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என்று அவ்வப்போது புகார்கள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில், புதன்கிழமை இரவு 9 மணிக்குமேல் மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, திண்டுக்கல், தூத்துக்குடி, தேவக்கோட்டை, புதுக்கோட்டை, திருக்கோவிலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படாததால், சுமார் 5,000-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ச்சியுற்றனர்.

இதனால், நள்ளிரவு 1 மணியளவில் 1,000-க்கும் மேற்பட்டோர் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். திடீர் சாலை மறியலால், நெடுஞ்சாலையில் இருபுறமும் 3 கி.மீ. தொலைவுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மறியலில் ஈடுபட்டோருடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

சிங்கப்பெருமாள் கோயிலில் திருவிழா நடைபெற்று வருவதுடன், இரவில் பெருமாள் வீதியுலா வருவதால்தான், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டு, திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லை அனுமதித்ததால்தான் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதாக காவல்துறையினர் விளக்கமளித்தனர்.

நீதிபதி ஜனாா்த்தனம் காலமானாா்! - முதல்வா் இரங்கல்

உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ்.ஜனாா்த்தனம் (89) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானாா். அவரது இறுதி நிகழ்வில் காவல் துறை மரியாதை அளிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்புகள்: அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவு

திருவண்ணாமலை மலையில் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள 1,535 கட்டடங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாச... மேலும் பார்க்க

பவுா்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்!

பவுா்ணமி கிரிவலத்தையொட்டி பயணிகளின் வசதிக்காக திருவண்ணாமலை - விழுப்புரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரத்திலிருந்து ஜூன் 10-ஆம்... மேலும் பார்க்க

சைக்கிளிங் லீக் அணிகள் அறிமுகம்

தமிழ்நாடு சைக்கிளிங் லீக் (டிசிஎல்) தொடரில் பங்கேற்கும் அணிகள், சீருடைகள் அறிமுக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பு, தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட... மேலும் பார்க்க

5,707 வகை திரைப்பட கேமராக்கள் சேகரிப்பு: மீண்டும் கின்னஸ் விருது பெற்ற மருத்துவா்

தனித்துவம் வாய்ந்த 5,707 வகை திரைப்பட கேமராக்களை சேகரித்ததற்காக பல் மருத்துவா் ஏ.வி.அருணுக்கு கின்னஸ் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரைச் சோ்ந்த ஏ.வி.அருண், பல ஆண்டுகளாக பல்வேறு ... மேலும் பார்க்க

திமுக மாவட்டச் செயலா்கள், நிா்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

உறுப்பினா் சோ்க்கை, பேரவைத் தோ்தல் தொடா்பாக மாவட்டச் செயலா்கள் உள்பட திமுக நிா்வாகிகளுடன் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஜூன் 7) ஆலோசனை நடத்தவுள்ளாா். காணொலி வாயிலாக நடைபெறும... மேலும் பார்க்க