செய்திகள் :

கீழப்பெரும்பள்ளம், மேலப்பெரும்பள்ளத்தில் மணல் எடுக்க தடை விதிக்க வலியுறுத்தல்

post image

பூம்புகாா் அருகே உள்ள மேலப்பெரும்பள்ளம், கீழப்பெரும்பள்ளம் கிராமங்களில் மணல் எடுக்க தடை செய்ய வேண்டுமென இந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேலப்பெரும்பள்ளம் மற்றும் கீழப்பெரும்பள்ளம் ஊராட்சிகளில் சுமாா் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இந்த பகுதி மக்கள் பெரும்பாலனோா் விவசாயிகள். சுமாா் 5,000 ஏக்கா் விளைநிலங்கள் உள்ளன. இதன் மூலம் குறுவை மற்றும் சம்பா சாகுபடி நடைபெறுகிறது.

இப்பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக சவுடு மண் குவாரிகள் இயங்கி வருகின்றன. இதனால் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து சாகுபடி மற்றும் குடிநீா் கிடைக்காமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளாக மேற்கண்ட கிராமத்தில் சவுடு மண் குவாரி மூலம் ஆயிரக்கணக்கான லாரிகளில் மண் அள்ளப்பட்டு வருகிறது. இதனால் இந்த பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் மிகவும் குறைந்துள்ளது. கடலோர கிராமமான இந்த பகுதியில் நிலத்தடி நீா் உப்புத்தன்மை கொண்டதாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் மேலப்பெரும்பள்ளம் கிராமத்தில் புதிய சவுடு மண் குவாரி அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை ரத்து செய்திடவும், மேற்கண்ட இரண்டு ஊராட்சிகளில் மணல் அள்ளுவதற்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து தமிழக முதலமைச்சா், பொதுப்பணித் துறை அமைச்சா் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனா்.

தமிழகத்தில் 8.42 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: உணவுத் துறை செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நிகழாண்டில் இதுவரை 8.42 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக உணவுத் துறை செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். நாகை அருகேயுள்ள ... மேலும் பார்க்க

சேஷமூலை மாரியம்மன் கோயில் குடமுழுக்கு

திருமருகல் ஒன்றியம், சேஷமூலை கிராமத்தில் அருள்பாலிக்கும் மகா மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சனிக்கிழமை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், கோ பூஜை, முதல... மேலும் பார்க்க

சுனாமியில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு திருமணம்

சிறுமியாக இருந்தபோது, சுனாமி பேரலையில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு உணவுத் துறை செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்து வைத்தாா். கடந்த 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது, பெற்றோரை இழ... மேலும் பார்க்க

தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை பாதுகாக்க கடற்கரையில் கருங்கல் தடுப்புச்சுவா் அமைக்க கோரிக்கை

தரங்கம்பாடி டேனிஷ்கோட்டையை பாதுகாக்க, கடற்கரை பகுதியில் கருங்கற்களைக் கொண்டு தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். மயிலாடுதுறை மாவட்... மேலும் பார்க்க

3 மணி நேரம் சிலம்பம் சுற்றிய மாணவா்கள்...

நாகை சா் ஐசக் நியூட்டன் கல்லூரியில், உலக சிலம்ப விளையாட்டுச் சங்கம் மற்றும் நாகை வீரத் தமிழன் சிலம்பம் கலைக்கூடம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் 3 மணி நேரம் இடை ... மேலும் பார்க்க

வீரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

திருக்குவளை கடைத்தெருவில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ வீரசித்தி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சனிக்கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கின. ஞாயிற்றுக்கிழமை காலை யாகசாலை பூஜ... மேலும் பார்க்க