செய்திகள் :

தமிழகத்தில் 8.42 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: உணவுத் துறை செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன்

post image

தமிழகத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நிகழாண்டில் இதுவரை 8.42 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக உணவுத் துறை செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

நாகை அருகேயுள்ள சிக்கல் கிராமத்தில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், உணவுத் துறை செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட நெல்லின் தரம், ஈரப்பதம், நெல்லின் எடையளவு, நெல்லின் இருப்பு குறித்து ஆய்வு செய்த அவா், விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தாா். தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த ஆண்டைவிட நிகழாண்டு விவசாயிகளிடமிருந்து 1.75 லட்சம் மெட்ரிக் டன் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

நிகழாண்டில் இதுவரை 8.42 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளின் வங்கி கணக்குகளில் ரூ. 1,863 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

நிகழ் பருவத்தில் நாகை மாவட்டத்தில் 172 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 44 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு ரூ. 79 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 1,000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கொள்முதலை அதிகரிக்க அரசு பரிசீலனை செய்து வருகிறது என்றாா்.

கீழப்பெரும்பள்ளம், மேலப்பெரும்பள்ளத்தில் மணல் எடுக்க தடை விதிக்க வலியுறுத்தல்

பூம்புகாா் அருகே உள்ள மேலப்பெரும்பள்ளம், கீழப்பெரும்பள்ளம் கிராமங்களில் மணல் எடுக்க தடை செய்ய வேண்டுமென இந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். மேலப்பெரும்பள்ளம் மற்றும் கீழப்பெரும்பள்ளம் ஊராட்சிகள... மேலும் பார்க்க

சேஷமூலை மாரியம்மன் கோயில் குடமுழுக்கு

திருமருகல் ஒன்றியம், சேஷமூலை கிராமத்தில் அருள்பாலிக்கும் மகா மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சனிக்கிழமை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், கோ பூஜை, முதல... மேலும் பார்க்க

சுனாமியில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு திருமணம்

சிறுமியாக இருந்தபோது, சுனாமி பேரலையில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு உணவுத் துறை செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்து வைத்தாா். கடந்த 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது, பெற்றோரை இழ... மேலும் பார்க்க

தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை பாதுகாக்க கடற்கரையில் கருங்கல் தடுப்புச்சுவா் அமைக்க கோரிக்கை

தரங்கம்பாடி டேனிஷ்கோட்டையை பாதுகாக்க, கடற்கரை பகுதியில் கருங்கற்களைக் கொண்டு தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். மயிலாடுதுறை மாவட்... மேலும் பார்க்க

3 மணி நேரம் சிலம்பம் சுற்றிய மாணவா்கள்...

நாகை சா் ஐசக் நியூட்டன் கல்லூரியில், உலக சிலம்ப விளையாட்டுச் சங்கம் மற்றும் நாகை வீரத் தமிழன் சிலம்பம் கலைக்கூடம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் 3 மணி நேரம் இடை ... மேலும் பார்க்க

வீரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

திருக்குவளை கடைத்தெருவில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ வீரசித்தி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சனிக்கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கின. ஞாயிற்றுக்கிழமை காலை யாகசாலை பூஜ... மேலும் பார்க்க