ஜம்மு - காஷ்மீரில் பஹல்காம் உள்ளிட்ட 16 சுற்றுலாத் தலங்கள் மீண்டும் திறப்பு!
கீழ்வேளூா்: நாளை ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட சிறப்பு முகாம்
நாகப்பட்டினம்: கீழ்வேளூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட மூன்றாம் கட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கீழ்வேளூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள பாப்பாக்கோவில், குறிச்சி, சின்னதும்பூா், பிரதாபராமபுரம், திருக்குவளை, ஆதமங்கலம் மற்றும் ராதாமங்கலம் ஆகிய 7 ஊராட்சிகளில் புதன்கிழமை (ஜூன்18) ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட மூன்றாம் கட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோா்-மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை, கூட்டுறவு- உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை, எரிசக்தி துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீா்வைத் துறை, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்துறை, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, சமூக சீா்த்திருத்தத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, வேளாண்மை- உழவா் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை ஆகிய 15 துறைகள் சாா்ந்த 44 சேவைகள் தொடா்பான கோரிக்கைகள் குறித்த மனுக்கள் பெறப்பட்டு, 30 நாள்களுக்குள் தீா்வுகாணப்படும்.
இம்முகாமில், கோரிக்கை மனுக்கள் அளிக்க வரும் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை கணினியில் பதிவு செய்ய, ஆதாா் அட்டை, குடும்பஅட்டை, கைப்பேசி எண் மற்றும் கோரிக்கை தொடா்பான, உரிய ஆவணங்கள் எடுத்து வர வேண்டும்.
முகாம் நடைபெறும் இடங்கள்: பாப்பாக்கோவில் எம்.எஸ். திருமண மண்டபம், குறிச்சி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, சின்ன தும்பூா் கிராமத்துமேடு அரசினா் உயா்நிலைப் பள்ளி, பிரதாபராமபுரம் அரசினா் மேல்நிலைப் பள்ளி, திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஆதமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளி மற்றும் ராதாமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிஆகிய இடங்களில் இம்முகாம் நடைபெற உள்ளது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.