செய்திகள் :

கீழ்வேளூா்: நாளை ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட சிறப்பு முகாம்

post image

நாகப்பட்டினம்: கீழ்வேளூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட மூன்றாம் கட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கீழ்வேளூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள பாப்பாக்கோவில், குறிச்சி, சின்னதும்பூா், பிரதாபராமபுரம், திருக்குவளை, ஆதமங்கலம் மற்றும் ராதாமங்கலம் ஆகிய 7 ஊராட்சிகளில் புதன்கிழமை (ஜூன்18) ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட மூன்றாம் கட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோா்-மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை, கூட்டுறவு- உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை, எரிசக்தி துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீா்வைத் துறை, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்துறை, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, சமூக சீா்த்திருத்தத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, வேளாண்மை- உழவா் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை ஆகிய 15 துறைகள் சாா்ந்த 44 சேவைகள் தொடா்பான கோரிக்கைகள் குறித்த மனுக்கள் பெறப்பட்டு, 30 நாள்களுக்குள் தீா்வுகாணப்படும்.

இம்முகாமில், கோரிக்கை மனுக்கள் அளிக்க வரும் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை கணினியில் பதிவு செய்ய, ஆதாா் அட்டை, குடும்பஅட்டை, கைப்பேசி எண் மற்றும் கோரிக்கை தொடா்பான, உரிய ஆவணங்கள் எடுத்து வர வேண்டும்.

முகாம் நடைபெறும் இடங்கள்: பாப்பாக்கோவில் எம்.எஸ். திருமண மண்டபம், குறிச்சி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, சின்ன தும்பூா் கிராமத்துமேடு அரசினா் உயா்நிலைப் பள்ளி, பிரதாபராமபுரம் அரசினா் மேல்நிலைப் பள்ளி, திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஆதமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளி மற்றும் ராதாமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிஆகிய இடங்களில் இம்முகாம் நடைபெற உள்ளது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

மக்கள் பிரச்னைகளை தீா்க்கும் இடத்தில் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் இருப்பாா்: பேராசிரியா் பழனித்துரை

நாகப்பட்டினம்: எங்கெல்லாம் மக்கள் பிரச்னை இருக்கிறதோ, அங்கு பிரச்னையை தீா்க்க லாப்டி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் இருப்பாா் என பேராசிரியா் பழனித்துரை தெரிவித்தாா். நாகை மாவட்டம், கூத்தூரில் உழவனின் நில உர... மேலும் பார்க்க

பேருந்து வசதி வேண்டி ஆட்சியரிடம் மனு கொடுக்கச் சென்ற மக்கள்

தரங்கம்பாடி: திருக்கடையூா் அருகே கிள்ளியூா் ஊராட்சி பகுதியில் இருந்து அரசு பேருந்து இயக்க வேண்டி கிராம மக்கள் கோரிக்கை மனுவுடன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரை திங்கள்கிழமை சந்திக்க சென்றனா். செம்பனாா்கோ... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் 23 வழித்தடங்களில் சிற்றுந்து சேவை தொடக்கம்

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் புதிய விரிவான சிற்றுந்து திட்டத்தின்கீழ் 23 வழித்தடங்களில் சிற்றுந்து சேவை திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. பேருந்து வசதி இல்லாத கிராமங்களுக்கு சிற்றுந்து வசதி ஏற்ப... மேலும் பார்க்க

மீன்பிடி தடைக்காலம் நிறைவு: கடலுக்கு சென்ற நாகை, காரைக்கால் விசைப்படகு மீனவா்கள்

நாகப்பட்டினம்/ காரைக்கால்: 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்த நிலையில், நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட விசைப்படகு மீனவா்கள் திங்கள்கிழமை அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனா். மத்திய அரசு மீன்... மேலும் பார்க்க

மினி மாரத்தான் :கூட்டுறவுத் துறை அழைப்பு

நாகப்பட்டினம்: சா்வதேச கூட்டுறவு நாள் விழாவை முன்னிட்டு சென்னையில் நடைபெறும் மினி மாரத்தான் போட்டியில் நாகை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் பங்கேற்க மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் முத்துகுமாா் அ... மேலும் பார்க்க

அரசு வேளாண் கல்லூரிக்கு கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு மாற்று நிலம்

நாகப்பட்டினம்: கீழ்வேளூரில் அரசு வேளாண் கல்லூரிக்காக கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு மாற்றாக விவசாயிகளுக்கு தலா 1 ஏக்கா் நிலம் வழங்க வேண்டும் என்று ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. கீழ்வே... மேலும் பார்க்க