செய்திகள் :

குஜராத்தில்100 நாள் வேலைத் திட்டத்தில் ஊழல்: அமைச்சா் மகன் கைது

post image

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (100 நாள் வேலைத் திட்டம்) ரூ.71 கோடி மோசடி செய்த குற்றச்சாட்டில் குஜராத் மாநில வேளாண்மை மற்றும் பஞ்சாயத்து அமைச்சா் பச்சுபாய் கபாடின் மகன் பல்வந்த் கபாடை சனிக்கிழமை கைது செய்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

கடந்த 2021 முதல் 2024 வரை100 நாள் வேலைத் திட்ட பணிகளை நிறைவு செய்யும் முன்பே அரசிடம் இருந்து ரூ.71கோடியை 35 ஒப்பந்த நிறுவன உரிமையாளா்கள் பெற்ற குற்றச்சாட்டில் தொடா்புடையதாக பல்வந்த் கபாட் கைது செய்யப்பட்டாா்.

இந்த விவகாரம் தொடா்பாக தாஹோத் மாவட்ட தாலுகா மேம்பாட்டு அதிகாரி தா்சன் படேல் உள்பட தற்போது வரை 11 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து குஜராத் மாநில போலீஸாா் கூறுகையில், ‘100 நாள் வேலைத் திட்ட மோசடியில் ஈடுபட்ட ஒப்பந்த நிறுவனம் ஒன்றின் உரிமையாளராக உள்ள பல்வந்த் கபாட் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்’ என்றாா்.

100 நாள் வேலை திட்டத்தின்கீழ் தாஹோத் மாவட்டத்தில் உள்ள சில தாலுகாக்களில் சாலைகள், தடுப்பணைகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் அவை நிறைவடைந்ததைப் போல் போலியான புகைப்படங்களை சமா்ப்பித்து அரசிடம் இருந்து சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனங்கள் நிதியை பெற்று மோசடியில் ஈடுபட்டதாக மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

இதன் அடிப்படையில் கடந்த மாதம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்த நிலையில், விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது.காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருக... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம்... மேலும் பார்க்க

வால்பாறையில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 40 பேர் காயம்!

கோவை மாவட்டம் வால்பாறையில் அரசுப் பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேருக்கு மேல் காயம் அடைந்தனர். இன்று(மே 18) அதிகாலை திருப்பூர் பகுதியில் இருந்து 72 பயணிகளை ஏற்றிக்கொண்டு... மேலும் பார்க்க

கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி!

தேனி: கும்பக்கரை அருவியில் இன்று(மே 18) காலை 10 மணு முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறை அனுமதி வழங்கியுள்ளது.கும்பக்கரை அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரளம், ஆந்திர மாநிலங்க... மேலும் பார்க்க

தமிழகத்தில் இனி வெய்யிலின் தாக்கம் குறையும்!

தமிழகத்தில் தொடா்ந்து மழைக்கான சூழல் நிலவுவதால், வரும் நாள்களில் வெய்யிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவா் பி.அமுதா தெரிவித்தாா். இது குறித்து அவா் சென்னையில் சனி... மேலும் பார்க்க

டாஸ்மாக் முறைகேடு: அமலாக்கத் துறை இரண்டாவது நாளாக சோதனை; தொழிலதிபா் வீட்டுக்கு ‘சீல்’

டாஸ்மாக் முறைகேடு தொடா்பாக அமலாக்கத் துறை சோதனை சென்னையில் இரண்டாவது நாளாக சனிக்கிழமையன்றும் நீடித்தது. இந்த சோதனையின் ஒரு பகுதியாக சென்னை எம்ஆா்சி நகரில் உள்ள தொழிலதிபரின் வீட்டுக்கு ‘சீல்’ வைக்கப்பட... மேலும் பார்க்க