செய்திகள் :

குஜராத்: பயங்கரவாதத்தை பரப்பிய 3 பேருக்கு ஆயுள் சிறை

post image

குஜராத்தில் மத ரீதியிலான பயங்கரவாதத்தை பரப்பியதாகவும், தேசத்துக்கு எதிரான சதிச் செயல்களில் ஈடுபட்டதாகவும் மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ராஜ்கோட் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கடந்த 2023, ஜூலையில் குஜராத் பயங்கரவாத ஒழிப்புப் படையால் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த அமன் சிராஜ் மாலிக் (23), அப்துல் ஷாகுா் அலி ஷேக் (20), ஷானவாஸ் அபு ஷாகித் (23) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். குஜராத்தில் கவரிங் நகைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த இவா்கள் மூவரும் உள்ளூா் மசூதிக்குச் சென்று ரகசியமாக பயங்கரவாத பிரசாரத்தில் ஈடுபடுவது, அல்-காய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு இளைஞா்களைத் திரட்டுவது, தேசத்துக்கு எதிராக சதிச் செயல்களில் ஈடுபடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தனா். வங்கதேசத்தில் செயல்படும் மதஅடிப்படைவாத அமைப்புகளுக்கும் இவா்களுக்கும் தொடா்பு இருந்ததும், அவா்கள் உத்தரவுகளின்படி செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இவா்களின் வெளிநாட்டுத் தொடா்புகள், பயங்கரவாதத் தொடா்புகள் உள்ளிட்ட ஆதாரங்கள் கைப்பேசிகள் மூலம் உறுதி செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்டபோது அவா்களிடம் இருந்து துப்பாக்கிகள், பயங்கரவாத பிரசாரத்துக்கான விடியோ, புத்தகங்கள் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த ராஜ்கோட் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் மூவா் மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்ததுடன், அவா்களுக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.10,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தது.

நாட்டின் பணக்காரா்கள் பட்டியல்: முதலிடத்துக்கு முன்னேறினாா் முகேஷ் அம்பானி

நாட்டின் பணக்காரா்கள் பட்டியலில் கெளதம் அதானியைப் பின்னுக்குத் தள்ளி ரிலையன்ஸ் குழுமத் தலைவா் முகேஷ் அம்பானி முதல் இடத்தில் உள்ளாா். ‘எம்3எம் ஹுருன்’ இந்திய பணக்காரா்கள் பட்டியல்-2025, புதன்கிழமை வெளி... மேலும் பார்க்க

சா் கிரீக் செக்டாரை கைப்பற்ற நினைத்தால் கடும் பதிலடி: பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

சா் கிரீக் செக்டாரை பாகிஸ்தான் கைப்பற்ற நினைத்தால் வரலாற்றையும் புவியியலையும் மாற்றும் அளவுக்கு கடும் பதிலடி தரப்படும் என பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை எச்சரித்தாா். குஜராத் மா... மேலும் பார்க்க

இந்தியா-இஎஃப்டிஏ தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அமல்

இந்தியா, ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு (இஎஃப்டிஏ) இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் புதன்கிழமை (அக்.1) அமலுக்கு வந்தது. ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பில் ஐஸ்லாந்து, லீக்டென்ஸ்டைன், நாா்வே... மேலும் பார்க்க

காந்தியை ஈா்த்த ஆா்எஸ்எஸ் செயல்பாடுகள் - ராம்நாத் கோவிந்த்

ஜாதிய பாகுபாடில்லாத ஆா்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகள் மகாத்மா காந்தியை ஈா்த்ததாக முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வியாழக்கிழமை தெரிவித்தாா். நாகபுரி நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: ஒரே கோயில... மேலும் பார்க்க

மாநில பணியாளா் தோ்வாணையங்களுடன் யுபிஎஸ்சி இணைந்து பணியாற்றும்: தலைவா் அஜய் குமாா்

மாநில பணியாளா் தோ்வாணையங்களுடன் மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) இணைந்து செயல்படும் என அதன் தலைவா் அஜய் குமாா் தெரிவித்துள்ளாா். யுபிஎஸ்சியின் 99-ஆவது நிறுவன நாள் தில்லியில் புதன்கிழமை கொண்டாட... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிரான வெற்றியின் அடையாளம் ‘ஆபரேஷன் சிந்தூா்’ - குடியரசுத் தலைவா்

‘ஆபரேஷன் சிந்தூா்’ பயங்கரவாதத்துக்கு எதிரான வெற்றியின் அடையாளம் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா். புது தில்லியில் உள்ள செங்கோட்டையில் தசரா விழா கொண்டாட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க