செய்திகள் :

குஜராத் பால விபத்து: பலி எண்ணிக்கை 20-ஆக உயர்வு

post image

வதோதராவில் பாலம் இடிந்து, ஆற்றுக்குள் வாகனங்கள் விழுந்த சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது.

ஆற்றில் இருந்து லாரியை ஆற்றும் பணியில் ஈடுபட்ட மேலும் இரண்டு உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் அதிகாரப்பூர்வ பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இரண்டு பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர். குஜராத்தில் வதோதரா-ஆனந்த் மாவட்டங்களை இணைக்கும் வகையில், மஹிசாகா் ஆற்றின் குறுக்கே 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி புதன்கிழமை திடீரென இடிந்து விழுந்தது.

அப்போது, பாலத்தில் சென்று கொண்டிருந்த 2 லாரிகள், 2 வேன்கள், ஒரு ஆட்டோ, ஒரு காா் உள்ளிட்ட வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்தன. பல அடி உயரம் வரையிலான அடா்ந்த சேற்றில் வாகனங்கள் சிக்கிக் கொண்டன. இந்த சம்பவத்தைத் தொடா்ந்து, காவல் துறையினா், தீயணைப்புப் படையினா், மாநகராட்சிப் பணியாளா்கள், தேசிய-மாநிலப் பேரிடா் மீட்புப் படையினருடன் உள்ளூா் மக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.

ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் உள்பட 11 பேரின் உடல்கள் புதன்கிழமை மீட்கப்பட்டன. இதில் இருவா் குழந்தைகளாவா். ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட 9 பேரில் காயமடைந்த 5 போ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். முதற்கட்ட அறிக்கையைத் தொடர்ந்து பொதுப்பணித் துறையைச் சேர்ந்த நான்கு பொறியாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்

இவ்விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள முதல்வர் பூபேந்திர படேல், 30 நாள்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். மத்திய குஜராத் மற்றும் செளராஷ்டிரா பகுதியை இணைக்கக் கூடிய இப்பாலம், 23 உயரமான தூண்களுடன் 900 மீட்டா் நீளம் கொண்டதாகும். இதில் இரு தூண்களுக்கு இடையிலான 15 மீட்டா் வரை நீளமுள்ள பகுதி துண்டாக இடிந்துள்ளது.

ஹிமாசல் பருவமழைக்கு இதுவரை 92 பேர் பலி: ரூ.751.78 கோடி இழப்பு!

ஹிமாச்சலப் பிரதேசம் முழுவதும் கனமழை மற்றும் மேக வெடிப்புகளால் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மாநிலத்தில் இந்தாண்டு பருவமழை ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், ... மேலும் பார்க்க

மகளைப் பற்றி தவறான பேச்சுகள்.. டென்னிஸ் வீராங்கனை ராதிகா கொலையில் வெளியான தகவல்!

டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் பற்றி பலரும் தவறாகப் பேசியதால் மனம் வேதனையடைந்து அவமானத்தால், மகளை சுட்டுக் கொன்றதாக, கைது செய்யப்பட்ட தந்தை தீபக் யாதவ் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஹர... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கவனம் செலுத்தும் பாஜக அரசு: பிரதமர்!

பொது மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தனது அரசு கவனம் செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தில்லியில் 51 ஆயிரம் இளைஞக்ளுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி நிய... மேலும் பார்க்க

ஒட்டுமொத்த அலட்சியம்! ஆர்சிபி கூட்டநெரிசல் குறித்த அறிக்கை தாக்கல்!!

பெங்களூரில், ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவத்துக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் என விசாரணை அறிக்கையில் தகவல்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கோப... மேலும் பார்க்க

ரூ.1.18 கோடி வெகுமதி: சத்தீஸ்கரில் 23 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் 23 நக்சல்கள் இன்று (ஜூலை 12) சரணடைந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் சரணடைந்த நக்சலைட்டுகளில் 11 மூத்த நக்சல்கள் ஆவார். அவர்களில் பெரும்ப... மேலும் பார்க்க

சாலைகளில் ஓடும் படகுகள்.. மத்திய பிரதேசத்தில் கரையைக் கடந்த மந்தாகினி ஆறு

போபால்: மத்திய பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக, மந்தாகினி ஆறு கரையை கடந்து பாய்ந்ததால், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் படகுகள் நீந்திச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.ராம்கட், ஜான்... மேலும் பார்க்க