செய்திகள் :

குஜராத் விமான விபத்து! 12 பேரின் உடல்கள் ஒப்படைப்பு! மருத்துவப் பணியில் 600 பேர்!

post image

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களின் உடல்களை ஒப்படைக்கும் பணி இன்றுமுதல் தொடங்கப்படுகிறது.

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் 270-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். விமானம் தீப்பற்றி எரிந்ததால், உள்ளிருந்தோர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனால், அவர்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து, உயிரிழந்தவர்களை அடையாளம்காண, அவர்களின் உறவினர்களிடம் டிஎன்ஏ மாதிரி கோரப்பட்டது.

இந்த நிலையில், இதுவரையில் சேகரிக்கப்பட்ட 31 டிஎன்ஏ மாதிரிகள் பொருந்தியுள்ளதாக அகமதாபாத் சிவில் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

மேலும், டிஎன்ஏ மாதிரிகளின் உதவியால், உயிரிழந்தவர்களில் 12 பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் குடும்பத்தினரிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதாக அகமதாபாத் சிவில் மருத்துவமனை கூடுதல் கண்காணிப்பாளர் ராஜனீஷ் படேல் தெரிவித்தார்.

இருப்பினும், பொருந்தியதாக வெளியிடப்பட்ட 31 டிஎன்ஏ மாதிரிகளில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் பெயர் இடம்பெறவில்லை.

டிஎன்ஏ பரிசோதனை, உடல்களை ஒப்படைக்கும் பணிகளில் மருத்துவகள், உதவியாளர்கள், ஓட்டுநர்கள் என சுமார் 600 பேர் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதையும் படிக்க:சொல்லப் போனால்... சொந்த மண்ணிலேயே அன்னியரைப் போல...

பிகாா்: பெண் காவலரைத் துப்பாக்கியால் சுட்ட சக காவலா்

பிகாரின் கைமூா் மாவட்டத்தில் ஆண் காவலரான அஜய் பஸ்வான், தனது உறவுக்கார பெண்ணான காவலா் சரிதா குமாரியைத் துப்பாக்கியால் சுட்டுள்ளாா். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தைத் தொடா்ந்து, அஜய் பஸ்வான... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்; இடி மின்னலுடன் பலத்த மழை: 8 போ் பலி!

மகாராஷ்டிரம் மாநிலம் முழுவதும் கடந்த சனிக்கிழமை இரவு முதல் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. மழை தொடா்பான அசம்பாவிதங்களில் சிக்கி 8 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். மகாராஷ்டிரத்தில் ... மேலும் பார்க்க

திருவனந்தபுரம்: பிரிட்டன் எஃப்35 போா் விமானம் அவசர தரையிறக்கம்!

பிரிட்டனின் எஃப்35 போா் விமானம் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் சனிக்கிழமை இரவு அவசரமாக தரையிறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த விமானத்தில் எரிபொருள் குறைவாக இருந்த காரணத்தால் தரையிறக்க நே... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: 46 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன!

ஏா் இந்தியா விமான விபத்து தொடா்பான விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், குஜராத் முன்னாள் முதல்வா் விஜய் ரூபானி உள்பட 47 பேரின் உடல்கள் டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

இந்தியா வழியாக வங்கதேசத்துக்கு நேபாளம் மின்சாரம் விற்பனை!

இந்தியா அமைத்துள்ள மின்வழித்தடங்களைப் பயன்படுத்தி வங்கதேசத்துக்கு நேபாளம் மின்சாரம் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. வங்கதேசத்துக்கு நேபாளம் 40 மெகாவாட் மின்சாரம் விற்பனை செய்கிறது. இது தொடா்பாக மூன்று... மேலும் பார்க்க

அம்பேத்கரை அவமதித்ததாக குற்றச்சாட்டு: லாலுவுக்கு பிகாா் பட்டியலினத்தவா் ஆணையம் நோட்டீஸ்!

சட்டமேதை அம்பேத்கரை அவமதித்த குற்றச்சாட்டு தொடா்பாக பிகாா் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாதுக்கு மாநில பட்டியலினத்தவா் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அண்மையில்... மேலும் பார்க்க