செய்திகள் :

குடிநீர் கட்டணம் வசூலுக்குச் சென்ற அலுவலர்கள் சிறை பிடிப்பு

post image

சேலம்: ஆத்தூர் அருகே குடிநீர் கட்டண வரி வசூலுக்குச் சென்ற அலுவலர்களை முற்றுகையிட்டு மக்கள் சனிக்கிழமை சிறை பிடித்தனா்.

முறையான குடிநீர் வழங்காமல் வரி மட்டும் எப்படி கேட்கலாம் என மக்கள் கேட்டபோது,அலுவலர்கள் தகாத வார்த்தையில் பேசியதாக கூறி சிறை பிடித்ததால் பரபரப்பு நிலவியது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட 10 ஆவது வார்டு வடக்கு தலைநகர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் குடிநீர் கட்டணம் செலுத்தாமல் உள்ள மக்களிடம் குடிநீர் கட்டண வரி வசூல் செய்வதற்காக நகராட்சி பொறியாளர் ஜெயமாலினி மற்றும் பொதுப்பணி மேற்பார்வையாளர் சுரேஷ் ஆகியோர் சென்றனர்.அப்போது குடிநீர் கட்டணம் செலுத்தவில்லை என்றால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து தங்கள் பகுதிக்கு 18 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாகவும்,அவையும் முறையாக வழங்கப்படாத நிலையில், குடிநீர் கட்டணம் மட்டும் எப்படி வசூலிக்கலாம் என மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பாஜக ஆளாத மாநிலங்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்தான் தொகுதி மறுசீரமைப்பு! - டி.கே. சிவகுமார் பேச்சு

அப்போது அலுவலர்கள் மக்களிடம் தகாத வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அதிகாரிகளை சிறை பிடித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்களை அலுவர்கள் தங்களது செல்போன்களில் விடியோ பதிவு செய்தனர். இதையடுத்து மக்களும் தங்களது செல்போன்களில் விடியோ பதிவு செய்ததை அலுவலர்கள் தட்டிவிட்டதால் செல்போன் உடைந்தது. வாக்குவாதம் தீவிரமடைந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. நகராட்சி அலுவலர்கள் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையில் காவலர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்!

மதுரையில் காவலர் எரித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் சுட்டுப் பிடிக்கப்பட்டார். கைதான ஆட்டோ ஓட்டுநர், பணத்துக்காக காவலரை எரித்துக் கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.கடந்த 19 ம... மேலும் பார்க்க

சத்துணவு ஊழியா்கள் நியமனம்: அமைச்சர் கீதாஜீவன் முக்கிய அறிவிப்பு!

சட்டப்பேரவையில் சத்துணவு ஊழியா்கள் நியமனம் தொடர்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.2025-26-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில... மேலும் பார்க்க

குடும்ப அட்டை வைத்திருக்கிறீர்களா? இன்னும் ஒரு சில நாள்களே உள்ளன!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குடும்ப அட்டைதாரா்கள் தங்களது குடும்ப உறுப்பினா்களுடன் வரும் 31-ஆம் தேதிக்குள் அருகிலுள்ள நியாயவிலைக் கடைகளில் விரல்ரேகை பதிவு செய்ய வேண்டும் என்று அந்தந்த மாவட்ட ஆ... மேலும் பார்க்க

சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

யூடியுபர் சவுக்கு சங்கர் வீட்டில் துய்மைப் பணியாளர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நிலையில் அந்த சம்பவத்திற்கு எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். யூடியுபர் சவுக்க... மேலும் பார்க்க

பூண்டி நீர்த்தேக்க கொள்ளளவை உயர்த்த நீர்வளத்துறை திட்டம்!

சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள பூண்டி நீர்த்தேக்கத்தின் கொள்ளளவை 35 அடியிலிருந்து 37 அடியாக உயர்த்த திட்டமிட்டு வருவதாக நீர்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர... மேலும் பார்க்க

மார்ச் 27, 28-ல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும்!

மார்ச் 27, 28 தேதிகளில் தமிழகத்தில் வெப்பநிலை 2 -3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் இதனால் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொட... மேலும் பார்க்க