செய்திகள் :

பூண்டி நீர்த்தேக்க கொள்ளளவை உயர்த்த நீர்வளத்துறை திட்டம்!

post image

சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள பூண்டி நீர்த்தேக்கத்தின் கொள்ளளவை 35 அடியிலிருந்து 37 அடியாக உயர்த்த திட்டமிட்டு வருவதாக நீர்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நீர்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

பூண்டி நீர்த்தேக்கம், பெருநகர சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாகும்.

பெருகி வரும் சென்னை மாநகர மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய, நீர்நிலைகளின் சேமிப்பு கொள்ளளவை அதிகரிக்க வேண்டியது காலத்தின் தேவை ஆகும். அவற்றில் ஒன்று பூண்டி நீர்த்தேக்கத்தின் கொள்ளளவை அதிகரிப்பதாகும்.

இதையும் படிக்க: தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வா? - அன்புமணி கேள்வி

அதன்படி, நீர்த்தேக்கத்தின் முழு நீர் மட்டத்தை மேலும் இரண்டு அடி அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறிய ரூ. 48 லட்சத்தில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பூண்டி நீர்த்தேக்கத்தை பலப்படுத்தி நீர்மட்டத்தை 35 அடியிலிருந்து 37 அடியாக உயர்த்துவதன் மூலம் நீர்த்தேக்கத்தின் கொள்ளளவை 3.231 டி.எம்.சி. யிலிருந்து 3.971 டி.எம்.சி-யாக உயர்த்த இயலும் என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, தற்போது உள்ள கொள்ளளவினைவிட 0.74 டி.எம்.சி நீரை கூடுதலாக சேமிக்க இயலும்.

தற்போது இத்திட்டத்திற்கான விரிவான ஆய்வுப் பணிகள் முடிவுற்று விரிவான திட்ட மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகைப் பறிப்பு கொள்ளையன் என்கவுன்டர்; காட்டிக்கொடுத்த ஷு: காவல் ஆணையர் அருண் விளக்கம்

சென்னை: சென்னைக்கு விமானத்தில் வந்து நகைப் பறிப்பில் ஈடுபட்டு விமானம் மூலம் தப்பிச் செல்லவிருந்த வடமாநிலக் கொள்ளையர்களில் ஒருவர் என்கவுன்டர் செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து சென்னை காவல் ஆணையர் அருண்... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற எஸ்.ஐ. கொலை வழக்கு: சிபிஐ-க்கு மாற்ற முறையீடு!

திருநெல்வேலியில் நிலப் பிரச்னை காரணமாக ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளா் ஜாகீா் உசேன் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி அவரது குடும்பத்தினர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் புதன்கிழமை முறைய... மேலும் பார்க்க

மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது ஏன்? - இபிஎஸ் விளக்கம்!

தமிழ்நாட்டில் நிலவும் பல்வேறு விவகாரங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் எடுத்துரைத்தாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

தமிழகத்தில் 160 கி.மீ. அதிவேக ரயில் சேவை: திட்ட அறிக்கைக்கு டெண்டர் வெளியீடு!

தமிழகத்தில் 3 வழித்தடங்களில் மித அதிவேக ரயில் சேவைகள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்வதற்கான டெண்டரை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட... மேலும் பார்க்க

நடிகர் மனோஜ் உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி!

நடிகர் மனோஜ் உடலுக்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் மாரடைப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு ... மேலும் பார்க்க

சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டவர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டவரை போலீஸார் என்வுகன்ட்டரில் சுட்டுக்கொன்றனர். தரமணி ரயில் நிலையம் அருகே வடமாநிலத்தைச் சேர்ந்தவர் ஜாஃபர் குலாம் ஹுசைன் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். தி... மேலும் பார்க்க