செய்திகள் :

பழநி: உள்கட்சி மோதல், முகநூல் பதிவு.. பெண்ணை அவதூறாக பேசிய வழக்கில் பாஜக பிரமுகர் கைது

post image

திண்டுக்கல் மாவட்டம் பழநி பெரியப்பாநகரைச் சேர்ந்தவர் பாஜக மேற்கு மாவட்ட முன்னாள் தலைவர் கனகராஜ். இவர் பாஜக நிர்வாகியான ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த எல்லைத்துரை மனைவி குறித்து அவதூறாக பேசிய ஆடியோ ஒன்று வெளியானது.

அதில் கனகராஜ், உள்கட்சி பிரச்னை விவகாரங்கள் குறித்தும், தன்னைப் பற்றி முகநூலில் செய்துள்ள பதிவுகளை நீக்கும்படி எல்லைத்துரையை மிரட்டுகிறார். மேலும் எல்லைத்துரையின் மனைவி குறித்தும் அவதூறாக பேசுகிறார்.

பழநி

இதுகுறித்து எல்லைத்துரையின் மனைவி புவனேஸ்வரி பழநி தாலூகா போலீஸாரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில், பெண்ணை மானபங்கம் செய்யும் வகையில் அவதூறாக பேசுவது, கொலை மிரட்டல் விடுப்பது உள்ளிட்ட 4 பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கனகராஜை கைது செய்தனர்.

நேற்று பழநி தாலுகா காவல் நிலையம் அழைத்துவரப்பட்ட கனராஜூக்கு ஆதரவாக பாஜகவினர் திரண்டனர். யாரையும் உள்ளே வந்துவிடாமல் தடுப்பதற்காக காவல் நிலையத்தை போலீஸார் பூட்டினர். இதனால் பழநியில் பரபரப்பு நிலவியது.

கைது

இதுகுறித்து பழநியைச் சேர்ந்த பாஜகவினரிடம் விசாரித்தபோது, ``எல்லைத்துரை கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதற்கு காரணம் கனகராஜ் தான் என நினைத்து, அவருக்கு எதிராக எல்லைத்துரை முகநூலில் தொடர்ச்சியாக பதிவிட்டு வந்தார். இதை கண்டிக்கும் விதமாக பேசிய கனகராஜின் ஆடியோவை வெளியிட்டதால் பிரச்னை பெரிதாகிவிட்டது. மேலும் கனகராஜ் மீது நடவடிக்கை கோரி எல்லைத்துரை நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் தான் கனகராஜை போலீஸார் கைது செய்துள்ளனர்'' என்று தெரிவித்தனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

'இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்' - சிறார்களால் ஏற்படும் சாலை விபத்துகள்; காரணம் என்ன?

ஒருங்கிணைந்த சாலை விபத்து தரவுத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ள தரவுகளின் படி, 2023-24 ஆண்டில், இந்தியளவில் தமிழ்நாட்டில் தான் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களால் அதிக விபத்துகள் ஏற்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த சாலை ... மேலும் பார்க்க

சென்னை: ஒரே நாளில் 7 செயின் பறிப்புச் சம்பவங்கள்; ஒருவர் என்கவுன்டர்; மூவர் கைது; என்ன நடந்தது?

சென்னையில் நேற்று (மார்ச் 25) காலை ஏழு இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இவைச் சுமார் ஒரு மணி நேரத்தில் நடந்துள்ளன. இவற்றில் சம்பந்தப்பட்ட இருவரை போலீசார் சிசிடிவி கேமரா உதவியுடன்‌ சென்ன... மேலும் பார்க்க

"யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு செய்தேன்" - சிவகங்கை இளைஞர் கைது; கூட்டாளிகளுக்கு வலைவீச்சு

சிவகங்கை மாவட்டத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த குற்றத்தில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள், சாதி ரீதியான மோதல்கள் உள்ளிட... மேலும் பார்க்க

மதுரை: இயக்குநர் வீட்டில் களவு; `5 நாள்களாகியும் விசாரணை இல்லை...' - காவல்துறை மீது குற்றச்சாட்டு!

எழுத்தாளரும் இயக்குநருமான லக்ஷ்மி சரவணக்குமார் தனது வீட்டில் பணம், நகை திருடப்பட்டுவிட்டதாகவும், அது குறித்து புகார் அளிக்கப்பட்டும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.தனியாக வாழும்... மேலும் பார்க்க

சிவகங்கை: பயிற்சி மருத்துவருக்குப் பாலியல் தொல்லை; நள்ளிரவு மருத்துவக் கல்லூரியில் என்ன நடந்தது?

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து நேற்று (மார்ச் 24) இரவு விடுதிக்குச் சென்ற பயிற்சி மருத்துவர் மீது பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத... மேலும் பார்க்க

சென்னை: ஒரே நாளில் `பல' செயின் பறிப்புச் சம்பவங்கள்; அலறிய வாக்கி டாக்கிகள் - சிக்கிய உபி இளைஞர்கள்!

சென்னை, திருவான்மியூர் இந்திரா நகர் பகுதியில் இன்று காலை பெண் ஒருவர் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது பைக்கில் வந்த இருவர், பெண்ணின் கழுத்தில் கிடந்த தங்க செயினைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில்... மேலும் பார்க்க