செய்திகள் :

கரூர்: "ஒரு ஆட்டை அறுத்து கொத்துக்கறி போட்டால் அதுதான் தேர்தல்" - செந்தில் பாலாஜி பேசியது என்ன?

post image

ஈகைப் பண்பையும், நல்லிணக்கத்தையும் போற்றும் புனித ரமலான் நோன்பு இஸ்லாமியப் பெருமக்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி பகுதியில் பள்ளப்பட்டி நகர தி.மு.க சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்வு நடைபெற்றது.

இதில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார்.

senthil balaji
senthil balaji

அப்போது பேசிய அவர், "பள்ளப்பட்டி மக்கள் அன்போடு பிரியாணி கொடுத்தால், அது திருமண விழா. அதேபோல், நோன்புக் கஞ்சி மற்றும் வடையும் கொடுத்தால் அது ரமலான் திருநாள்.

ஆயிரக்கணக்கான ஆடுகளை அறுத்து குருபானி கொடுத்தால் அது பக்ரீத் காலம். அதுவே, ஒரே ஒரு ஆடு அறுத்து கொத்துக்கறி போட்டால் அது தேர்தல் காலம்.

எனவே, ஒரு ஆடு அல்ல எத்தனை ஆடு வந்தாலும் பள்ளப்பட்டியில் உள்ளேயும் வர முடியாது. உள்ளே வந்துவிட்டு வெளியேவும் செல்ல முடியாது எனக் கடந்த தேர்தலில் காட்டி உள்ளீர்கள்" எனப் பேசினார்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

'எல்லாம் நன்மைக்கே...' - எடப்பாடி- அமித் ஷா சந்திப்பு குறித்து ஓபிஎஸ்

தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்றும் வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி நேற்று திடீர் பயணமாக டெல்லி சென்றார். அங்கு அதிமுக சார்பில் டெல்லியில் அண்மையில் திறக்கப்பட்ட... மேலும் பார்க்க

ஒன் பை டூ!

நாராயணன் திருப்பதிநாராயணன் திருப்பதி, மாநிலத் துணைத் தலைவர், பா.ஜ.க“எங்கள் தலைவர் சொல்லியிருப்பது உண்மைதானே... இந்த தி.மு.க அரசு, தெருவுக்குத் தெரு மதுக்கடைகளைத் திறந்து மக்களைக் குடிப்பழக்கத்துக்கு அ... மேலும் பார்க்க

Amit Shah: 2026 இல் தமிழகத்தில் NDA ஆட்சியமைக்கும் - எடப்பாடியின் சந்திப்பும் அமித்ஷாவின் பதிவும்

அதிமுகவின் பொதுச்செயலாளரான எடப்பாடி உட்பட அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் சிலர் மத்திய அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்திருக்கின்றனர். இந்த சந்திப்புக்குப் பிறகு, '2026 இல் தமிழகத்தில் தேசிய ஜன... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: `அண்ணாமலை மீது எஃப்.ஐ.ஆர் பதிவு!' - பியூஷ் மனுஷ் சொல்வதென்ன?

மதுரை மாவட்டத்தில் இருக்கும் திருப்பரங்குன்றம் மலையானது முருகன் கோயில், காசிவிஸ்வநாதர் கோயில், சிக்கந்தர் பாதுஷா தர்கா, சமண சிற்பங்கள் ஆகியவற்றைக் கொண்ட மதநல்லிணக்கத்துக்கு சான்றான தளமாக விளங்குகிறது.... மேலும் பார்க்க