செய்திகள் :

சத்துணவு ஊழியா்கள் நியமனம்: அமைச்சர் கீதாஜீவன் முக்கிய அறிவிப்பு!

post image

சட்டப்பேரவையில் சத்துணவு ஊழியா்கள் நியமனம் தொடர்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

2025-26-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மாா்ச் 14-இல் தாக்கல் செய்தார். மாா்ச் 15-இல் வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் அமைச்சர் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் செல்வம் தாக்கல் செய்தார்.

இரு நிதிநிலை அறிக்கைகள் மீதும் மாா்ச் 17 முதல் மாா்ச் 20 வரை விவாதம் நடைபெற்றது. திமுக, அதிமுக உள்பட பல்வேறு கட்சிகளின் உறுப்பினா்கள் விவாதங்களில் பங்கேற்று கருத்துகளை முன் வைத்தனர். அதற்கு மாா்ச் 21-இல் அமைச்சா்கள் தங்கம் தென்னரசுவும், எம்.ஆா்.கே.பன்னீா்செல்வமும் பதில் அளித்து உரையாற்றினா். மாா்ச் 22, 23 ஆகிய நாள்கள் (சனி, ஞாயிறு) விடுமுறை என்பதால் பேரவை கூட்டம் நடைபெறவில்லை.

இதையும் படிக்க: குடும்ப அட்டை வைத்திருக்கிறீர்களா? இன்னும் ஒரு சில நாள்களே உள்ளன!

இந்த நிலையில், பேரவை இன்று (மாா்ச் 24) காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடியது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரத்தில் உறுப்பினா்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். அதன் பிறகு துறை ரீதியான மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது.

இதனிடையே, சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தில் பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி, "அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதால், புதிய நியமனம் எப்போது தொடங்கப்படும்? அதேபோல, சத்துணவு மையங்களிலும் பணியிடங்கள் காலியாக உள்ளது. அங்கேயும் பணிச்சுமை இருக்கிறது, இவையெல்லாம் நிறைவேற்றப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் கீதாஜீவன், ”அங்கன்வாடி மையத்தில் 7,900 பணியாளர்கள், 8,997 சத்துணவு சமையலர்களை நியமிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் நியமன நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது ஏன்? - இபிஎஸ் விளக்கம்!

தமிழ்நாட்டில் நிலவும் பல்வேறு விவகாரங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் எடுத்துரைத்தாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

தமிழகத்தில் 160 கி.மீ. அதிவேக ரயில் சேவை: திட்ட அறிக்கைக்கு டெண்டர் வெளியீடு!

தமிழகத்தில் 3 வழித்தடங்களில் மித அதிவேக ரயில் சேவைகள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்வதற்கான டெண்டரை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட... மேலும் பார்க்க

நடிகர் மனோஜ் உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி!

நடிகர் மனோஜ் உடலுக்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் மாரடைப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு ... மேலும் பார்க்க

சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டவர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டவரை போலீஸார் என்வுகன்ட்டரில் சுட்டுக்கொன்றனர். தரமணி ரயில் நிலையம் அருகே வடமாநிலத்தைச் சேர்ந்தவர் ஜாஃபர் குலாம் ஹுசைன் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். தி... மேலும் பார்க்க

கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா

கோவை விமான நிலைய விரிவாக்க கட்டுமானப் பணிகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளதாக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்தாா். சட்டப்பேரவையில் நகராட்சி நிா்வாகத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில்... மேலும் பார்க்க

மத்திய அரசின் நிதிக்காக சொத்து வரி உயா்வு: கே.என்.நேரு

மத்திய அரசின் நிதிக்காகத்தான் சொத்துவரி உயா்த்தப்பட்டதாக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு கூறினாா். நகராட்சி நிா்வாகத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினா் எஸ்.பி.வேலு... மேலும் பார்க்க