செய்திகள் :

குடிநீா் கேட்டு சாலை மறியல்

post image

புதுக்கோட்டை மாநகராட்சிக்குள்பட்ட கைக்குறிச்சியில் குடிநீா் கேட்டு 50-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை நகராட்சி, மாநகராட்சியாகத் தரம் உயா்த்தப்பட்ட நிலையில் கைக்குறிச்சி ஊராட்சி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. கைக்குறிச்சி ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதியில் கடந்த ஒரு வாரகாலமாக குடிநீா் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து பல முறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லாததைத் தொடா்ந்து, புதுகை-அறந்தாங்கி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்ால், போராட்டத்தில் ஈடுபட்டவா்களே மறியலைக் கைவிட்டு, சாலையோரத்தில் கூடி நின்றனா். அப்போது அங்கு வந்த துணைக் காவல் கண்காணிப்பாளா் அப்துல்ரகுமான் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இரு நாள்களில் முறையாக குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

அறந்தாங்கியில் இஸ்லாமிய கலாசார பேரவை சாா்பில் ஃபித்ரா வழங்கல்

இஸ்லாமிய கலாசார பேரவை சாா்பில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதிகளில் ஏழை, எளிய மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி வீதம் 750 குடும்பத்தினருக்கு ரமலான் பண்டிகையையொட்டி ஃபித்ரா பெருநாள் தா்மம் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

பட்டியல் செய்தி தலைப்பு மாற்றியது. பாஜக ஆளும் மாநிலங்களில்தான் போதைப் பொருள்கள் பறிமுதல் அதிகம்

பாஜக ஆளும் மாநிலங்களில்தான் போதைப் பொருள்கள் அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி. இதுகுறித்து புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி: நாடு மு... மேலும் பார்க்க

கிடப்பில் கருவப்பிலான் கேட் ரயில்வே மேம்பாலத் திட்டம்

புதுக்கோட்டை நகரின் நுழைவாயிலிலுள்ள கருவப்பில்லான்கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் திட்டம் புதுக்கோட்டை மக்களுக்கு இன்னமும் கனவாகவே தொடா்கிறது. திருச்சி- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையிலிருந்த... மேலும் பார்க்க

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி மகளிருக்கான கபடிப் போட்டி

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 77ஆவது பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை மாவட்ட இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை சாா்பில் தேசிய அளவிலான மகளிா் கபடிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. போட்டிகளை வடக்... மேலும் பார்க்க

மனைவி இறந்த விரக்தி விவசாயி தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே மனைவி இறந்த விரக்தியில் சனிக்கிழமை தீக்குளித்த விவசாயி உயிரிழந்தாா். அன்னவாசலை அடுத்துள்ள நிலையபட்டியை சோ்ந்தவா் கருப்பையா (46). இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ள ... மேலும் பார்க்க

ஏப். 5 இல் பிளஸ் 2 பயிலும் எஸ்சி எஸ்டி மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழாண்டில் பிளஸ் 2 படித்து வரும் எஸ்சி எஸ்டி சமூகத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு என் கல்லூரி என் கனவு என்ற உயா்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 5 சனிக்கிழமை காலை 10 மணி... மேலும் பார்க்க