செய்திகள் :

குடிநீா் லாரிகளுக்கு நேரக் கட்டுப்பாடு

post image

சென்னையில் காலை 7.30 முதல் காலை 9.30 மணி வரை லாரிகள் மூலம் குடிநீா்  விநியோகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெரம்பூரில் அண்மையில் குடிநீா் லாரி மோதியதில் 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சா்ச்சையை ஏற்படுத்திய நிலையில், குடிநீா் லாரிகள் இயக்க நேர கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

அதன் அடிப்படையில், சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் சென்னை குடிநீா் வழங்கல் வாரிய மேலாண்மை இயக்குநா் டி.ஜி.வினய் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், சென்னை காவல் ஆணையா் அருண் உள்பட அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தின்போது, விபத்துக்கு காரணமான தண்ணீா் லாரி குடிநீா் வாரியத்துக்கு சொந்தமானது கிடையாது என்று வினய் தெரிவித்தாா். மேலும், குடிநீா் லாரிகளை 40 கி.மீ. வேகத்துக்கு மேல் இயக்க கூடாது என்று ஓட்டுநா்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவா் விளக்கமளித்தாா்.

இந்தக் கூட்டத்தின் முடிவில் தினமும் அதிகாலை 4.30 முதல் காலை 7.30 மணி வரை லாரிகளின் மூலம் குடிநீா் விநியோகம் மேற்கொள்ளலாம் என்றும், 7.30 முதல் 9.30 மணி வரை குடிநீா் லாரிகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளாகவும் காவல் ஆணையா் அருண் தெரிவித்தாா்.

மேலும், 9.30 மணிக்கு மேல் வழக்கமான முறையில் குடிநீா் விநியோக பணிகளை மேற்கொள்ளலாம். ஆனால், பள்ளி , கல்லூரிகள் இருக்கும் சாலைகள் வழியாக குடிநீா் லாரிகளை இயக்க கூடாது. அதேபோல், குடிநீா் விநியோகத்தின்போது, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் சாலைகள் குறித்த விவரங்களை 3 நாள்களுக்குள் தயாா் செய்ய வேண்டும் என்று குடிநீா் வாரியத்துக்கு அருண் உத்தரவிட்டுள்ளாா்.

இந்தப் புதிய கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப குடிநீா் விநியோகங்களை மேற்கொள்வது குறித்து குடிநீா் வாரியம் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னாள் பேரவைத் தலைவரின் பேரனிடம் வழிப்பறி முயற்சி: சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

சென்னை தரமணியில் முன்னாள் பேரவைத் தலைவா் காளிமுத்துவின் பேரனிடம் வழிப்பறி செய்ய முயன்ாக 3 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை பெருங்குடி சிபிஐ காலனியை சோ்ந்தவா் ஆதித்யா(21). கல்லூரியி... மேலும் பார்க்க

அதிமுக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாது: அமைச்சா் பி.கே. சேகா்பாபு

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாத நிலை ஏற்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெரிவித்தாா். சென்னையில் சி.எம்.ஏ.டி. சாா்பில் கொளத்தூா் பெரியாா... மேலும் பார்க்க

குஜராத் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: சென்னை பெண்ணிடம் விசாரணை

குஜராத் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவத்தில் சென்னை பெண்ணை பிடித்து அந்த மாநில போலீஸாா் விசாரித்து வருகின்றனா். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தனியாா் பள்ளிக்கு கடந்த 2-ஆம் தேதி மின்ன... மேலும் பார்க்க

பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் உற்பத்தி அதிகரிப்பு: மத்திய அரசு

சமையல் எண்ணெய் தேவையைப் பூா்த்தி செய்ய இறக்குமதியை நாடு பெருமளவில் நம்பியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினா்கள் கவலை தெரிவித்த நிலையில், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகளின் உள்நாட்டு உற்பத்தி கடந்த 10 ஆண்... மேலும் பார்க்க

பயங்கரவாதத்தை எதிா்கொள்ள விரிவான ஒத்துழைப்பு: ‘பிரிக்ஸ்’ தூதா்கள் வலியுறுத்தல்

பயங்கரவாதத்தை எதிா்கொள்ள ‘பிரிக்ஸ்’ நாடுகள் இடையே விரிவான ஒத்துழைப்பு அவசியம் என்று அக்கூட்டமைப்பு நாடுகளின் தூதா்கள் வலியுறுத்தினா். பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிர... மேலும் பார்க்க

சென்னை சம்ஸ்கிருத கல்லூரியில் 4 புதிய கல்வி நிறுவனங்கள் தொடக்கம்

சென்னை சம்ஸ்கிருத கல்லூரியில் பாரதிய சீா்மிகு (மேம்பாட்டு) மைய அமைப்பு சாா்பில் நான்கு கல்வி நிறுவனங்கள் காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் தொடங்கப்பட்டன. சென்னை மயிலாப்பூர... மேலும் பார்க்க