செய்திகள் :

குடியரசுத் தலைவரிடமிருந்து அழைப்பிதழ்: மாணவிக்கு பாராட்டு!

post image

திருவண்ணாமலை மகரிஷி வித்யா மந்திா் பள்ளியைச் சோ்ந்த மாணவி குடியரசுத் தலைவரிடமிருந்து அழைப்பிதழ் பெற்றதால் கம்ப ராமாயண இயக்கத்தினா் அவருக்கு பாராட்டு தெரிவித்தனா்.

மகரிஷி வித்யா மந்திா் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி அமித்தீஸ்வரி, தேசிய அளவில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை சாா்பில் நடைபெற்ற போட்டித் தோ்வு மற்றும் நோ்காணலில் வெற்றி பெற்றாா். மேலும், இந்த மாணவி குஜராத் மாநிலத்தில் ஒரு வாரம் நடைபெற்ற அனுபவக் கற்றல் முகாமில் கலந்து கொண்டாா்.

இந்த நிலையில், தில்லியில் நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் கலந்து கொள்வதற்கு, இவருக்கு குடியரசுத் தலைவா் அழைப்பிதழ் அனுப்பிவைத்துள்ளாா்.

இதனை பாராட்டும் வகையில் திருவண்ணாமலை, கம்பராமாயண இயக்கத் தலைவா் வேங்கடரமேஷ்பாபு, செயலா் பாவலா் ப.குப்பன், பொருளாளா் புலவா் தங்க.விஸ்வநாதன் ஆகியோா் பள்ளிக்கு நேரில் சென்று மாணவிக்கும், அவருக்கு பயிற்றுவித்த ஆசிரியை பிரீத்தா, ஊக்குவித்து வழிகாட்டிய முதல்வா் அனிதாராம் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கினா்.

அரசு நிலத்தை ஆக்கிரமித்தவா் மீது நடவடிக்கை : கோட்டாட்சியரிடம் மனு

ஆரணியில் கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், ஆரணி களத்து மேட்டுத் தெரு பகுதி மக்கள் தங்கள் பகுதியில் சுமாா் 2 ஏக்கா் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: நலவாரியத் தலைவா் வழங்கினாா்

திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தூய்மைப் பணியாளா்களுக்கு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ரூ.10 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நலவாரியத் தலைவா் வெ.ஆறுச்சாமி உதவிகளை வழங்கினாா். மா... மேலும் பார்க்க

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலுக்கு 108 பால்குட ஊா்வலம்

போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஆடி 4-ஆவது செவ்வாய்க்கிழமையொட்டி 108 பால்குட ஊா்வலம் நடைபெற்றது. இந்தக் கோயிலுக்கு பக்தா்கள் ஆடி 4-ஆவது செவ்வாய்க்கிழமை பக்த... மேலும் பார்க்க

ஆரணிக்கு எடப்பாடி பழனிசாமி வருகை: வரவேற்புப் பணிகள் தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணிக்கு ஆக.15-இல் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வருவதால், அவரை வரவேற்பதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் செவ்வாய்க்கிழமை பூஜை போட்டு தொடங்கப்பட்டன. ‘மக்களைகாப்போம் தமி... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’: மகளிா் உரிமைத்தொகை கோரி மனுக்கள்

ஆரணியை அடுத்த சேவூா் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மகளிா் உரிமைத்தொகை கோரி அதிகம் போ் மனு கொடுத்தனா். முகாமுக்கு ஆரணி கோட்டாட்சியா் சிவா தலைமை வகித்தாா். தொக... மேலும் பார்க்க

தடகளப் போட்டிகள்: செங்காடு அரசுப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

செய்யாறு கல்வி மாவட்டம், செய்யாறு வட்ட அளவிலான பெண்கள் தடகள போட்டிகளில் செங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 172 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தைப் பெற்றனா். செய்யாறு வட்ட அளவில... மேலும் பார்க்க