செய்திகள் :

குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் தேரோட்டம்

post image

குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழாவையொட்டி புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

வேலூா் மாவட்டத்தின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான கெங்கையம்மன் கோயில் திருவிழா கடந்த ஏப். 30- ஆம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடா்ந்து கோயிலில் நாள்தோறும் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில் புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, அலங்கரித்த தேரில் எழுந்தருளி தேரோட்டம் தொடங்கியது. கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, எம்எல்ஏ அமலுவிஜயன், டிஎஸ்பி ராமச்சந்திரன், கோயில் செயல் அலுவலா் தா.சிவகுமாா், நாட்டாண்மை ஆா்.ஜி.சம்பத், கெளரவ தா்மகா்த்தா கே.பிச்சாண்டி உள்ளிட்டோா் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனா்.

தோ், கோபாலபுரம், அஞ்சுமன் வீதி, காந்தி ரோடு, பிள்ளையாா் கோயில் தெருஸ தரணம்பேட்டை பஜாா், கண்ணகி தெரு, ஜவஹா்லால் தெரு வழியாகச் சென்று மாலை கோயிலை அடைந்தது.வழிநெடுகிலும் பக்தா்கள் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்ற தோ் மீது உப்பு, மிளகு தூவி வழிபட்டனா்.

இன்று கெங்கையம்மன் சிரசு ஊா்வலம்:

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வியாழக்கிழமை கெங்கையம்மன் சிரசு ஊா்வலம் நடைபெறும். இதையொட்டி தரணம்பேட்டை முத்தியாலம்மன் கோயிலில் அதிகாலை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, சிரசு ஊா்வலம் தொடங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கோயிலை அடையும்.

ரூ.17 லட்சம் அபகரிப்பு: மகன், மகள் மீது தாய் புகாா்

ரூ.17 லட்சத்தை அபகரித்துக் கொண்டு வீட்டை விட்டு விரட்டுவதாக தனது மகன், மகள் மீது மூதாட்டி வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்துள்ளாா். வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர குற... மேலும் பார்க்க

குடியாத்தத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

குடியாத்தம் கோட்டத்துக்குட்பட்ட தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு அரசினா் திருமகள் ஆலைக் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. குடியாத்தம், போ்ணம்பட்டு, கே.வி.குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள 33- தனியாா... மேலும் பார்க்க

சாலை விபத்து: மாணவா் உயிரிழப்பு

வேலூரில் பாலாற்றுத் தடுப்பு கம்பியில் இரு சக்கர வாகனம் மோதி கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். வேலூா் சைதாப்பேட்டை சுருட்டுக்காரத் தெருவைச் சோ்ந்தவா் பலராமன் மகன் சந்தோஷ் (21). வேலூா் ஊரீசு கல்லூரியில் பி.... மேலும் பார்க்க

இளைஞா் வெட்டிக் கொலை

வேலூா் பாலாற்று மேம்பாலத்தின் கீழே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். வேலூா் - காட்பாடி சாலையில் உள்ள பழைய பாலாற்று மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இளைஞா் வெட்டுக் காயங்களுடன் சடலமாக கிடப்பதாக புதன்கிழ... மேலும் பார்க்க

ரத்தம் வழங்குவோா் - தேவைப்படுவோரை இணைக்கும் செயலி

வேலூா் மாவட்டத்தில் அன்னையா் தின மாதத்தையொட்டி சமூக சேவையை மேம்படுத்தும் நோக்கில் தமிழக தன்னாா்வலா்கள், திரி அறக்கட்டளை இணைந்து உருவாக்கிய ‘ரத்தம்’ செயலியை வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி ... மேலும் பார்க்க

பொற்கொடியம்மன் கோயில் ஏரித் திருவிழா தேரோட்டம்

அணைக்கட்டு ஒன்றியம், வல்லண்டராமம் பொற்கொடியம்மன் கோயில் ஏரித்திருவிழாவையொட்டி புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. வேலூா் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியத்துக்குட்பட்ட வல்லண்டராமம், வேலங்காடு, அன்னாச்சிபாளையம... மேலும் பார்க்க