செய்திகள் :

குடும்ப வன்முறை; பாதிக்கப்பட்ட மனைவிக்கு ரூ.2 லட்சம் வழங்க உத்தரவு - தொடர் சிக்கலில் மகா., அமைச்சர்

post image

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பாக அமைச்சராக இருப்பவர் தனஞ்சே முண்டே. இவர் சமீப காலமாக தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். ஏற்கனவே தனஞ்சே முண்டேயிக்கு நெருக்கமான ஒருவர் பஞ்சாயத்து தலைவரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

தனஞ்சேயின் சொந்த மாவட்டமான பீட் மாவட்டத்தில், காற்றாலை உரிமையாளர்களிடம் ரூ.2 கோடி கேட்டு மிரட்டி பணம் பறித்ததை தட்டிக்கேட்டதால் பஞ்சாயத்து தலைவர் படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலை மற்றும் மிரட்டி பணம் கேட்டதில் அமைச்சர் தனஞ்சே முண்டேயிக்கு தொடர்பு இருக்கிறது என்று எதிர்க்கட்சிகளும், பா.ஜ.க எம்.எல்.ஏ.சுரேஷ் தாஸ் என்பவரும் கூறி வருகின்றனர். அதோடு அமைச்சரை பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது தவிர இதற்கு முன்பு அமைச்சராக இருந்த போது கொரோனா காலத்தில் அமைக்காத சாலைக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி மோசடி செய்ததாகவும் தனஞ்சே முண்டே மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தற்போது மேலும் ஒரு சிக்கலில் தனஞ்சே முண்டே சிக்கி இருக்கிறார். தனஞ்சே முண்டேயின் மனைவி கருணா முண்டே தனது கணவருக்கு எதிராக குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் மும்பை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த மும்பை பாந்த்ரா குடும்ப நீதிமன்றம் அமைச்சர் தனஞ்சே முண்டே தனது மனைவி கருணா முண்டேயிக்கு மாதம் ரூ.2 லட்சம் கொடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறது.

இது குறித்து கருணா முண்டே கூறுகையில், ''கோர்ட் மூலம் எனக்கு நீதி கிடைத்திருக்கிறது. குழந்தைகள் இப்போது என்னுடன் இருக்கின்றனர். எனவே ரூ.2 லட்சம் என்பதை 5 லட்சமாக அதிகரித்து கொடுக்கவேண்டும் என்று கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்வது குறித்து பரிசீலிக்கப்படும். இந்த பணத்திற்காக கடந்த மூன்று ஆண்டுகளாக போராடினேன். இப்போராட்டத்தின் போது சொல்ல முடியாத அளவுக்கு நான் கஷ்டங்களை அனுபவித்தேன். நான் அமைச்சருடன் போராடினேன். எனது வழக்கறிஞர் வெறும் ஒரு ரூபாய் பெற்றுக்கொண்டு எனக்காக வாதாடினார். இன்றைக்கு நாங்கள் வெற்றி பெற்று இருக்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.

கருணா முண்டேயிக்கு வாழ்த்து தெரிவித்து மகாராஷ்டிரா ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி அஞ்சலி தமானியா தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அமைச்சர் தனஞ்சே முண்டே தனது முதல் மனைவி கருணா முண்டேயை அடித்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. கோர்ட் உத்தரவு அஜித்பவார் கட்சி அமைச்சர் தனஞ்சே முண்டேயிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

பூனம் குப்தா: ஜனாதிபதி மாளிகையில் திருமணம் செய்துகொள்ளும் முதல் பெண் - எப்படி சாத்தியம்?

வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக ஒரு திருமணம் நடைபெற உள்ளது. மத்திய ரிசர்வ் காவல் படையின் அதிகாரியான பூனம் குப்தா இந்திய குடியரசுத் தலைவரின் அதிகாரபூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனில் திருமணம் செய்து கொள்ளவு... மேலும் பார்க்க

1000-க்கு 'T' பதிலாக ஏன் 'K' பயன்படுத்தப்படுகிறது? - பின்னால் இருக்கும் சுவாரஸ்ய தகவல் தெரியுமா?

எண்களில் ஆயிரத்தை 1k என்று குறிப்பதை நாம் பார்த்திருப்போம். மில்லியனுக்கு 'M' என்ற வார்த்தையும் பில்லியனுக்கு 'B' என்ற வார்த்தையும் பயன்படுத்தப்படும் இடத்தில் ஆயிரத்திற்கு ( thousand) மட்டும் ஏன் 'T' ... மேலும் பார்க்க

Ed Sheeran: சென்னையில் கான்சர்ட் நடத்தும் பிரிட்டிஷ் பாடகர்; பேரன்பைக் கொடுக்கும் மக்கள்- யார் இவர்?

இங்கிலாந்தில் பிறந்த இவர் சென்னையில் கான்செட் நடத்தும் அளவிற்கு ரசிகர் கூட்டம் இருப்பது பெரும் பிரமிப்பை உண்டாக்குகிறது. இதனால் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா வந்த இங்கிலா... மேலும் பார்க்க

முதல்வர் பதவி... மும்பை முதல்வர் இல்லத்தில் எருமையை பலியிட்டு பில்லிசூனியம் வைத்தாரா ஏக்நாத் ஷிண்டே?

மகாராஷ்டிராவில் முதல்வராக இருப்பவர்களுக்காக வர்ஷா என்ற அரசின் அதிகாரப்பூர்வ இல்லம் இருக்கிறது. இந்த இல்லத்தில் தான் முதல்வர் மற்ற அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் அதிகாரப்பூர்வ சந்திப்புகளை மேற... மேலும் பார்க்க

காதல் தோல்வி கட்டாயம்; 'Chief Dating Officer' பதவி ஆள்தேடிய நிறுவனம் - முக்கிய கண்டிஷன் இவைதான்!

பெங்களூருவைத் தளமாகக் கொண்ட டாப்மேட் என்ற நிறுவனத்திற்கு தலைமை டேட்டிங் அதிகாரி வேண்டுமென்று சமூக வலைதளங்களில் பதிவிட்டது தற்போது வைரலாகி வருகிறது.இந்தியாவில் பல்வேறு ஸ்டார்ட்டர் நிறுவனங்கள் வந்துவிட்... மேலும் பார்க்க

உடல் நிலை குறித்து தவறான தகவல்; யூடியூப் வீடியோவை நீக்குமாறு ஐஸ்வர்யா ராய் மகள் கோர்ட்டில் வழக்கு!

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா பச்சன் குறித்து அடிக்கடி எதாவது தகவல் வந்து கொண்டே இருக்கிறது. ஐஸ்வர்யா ராய் எங்கு சென்றாலும் தனது மகளை கூடவே அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த 202... மேலும் பார்க்க