செய்திகள் :

குட்கா விற்பனை: இரு பெண்கள் கைது

post image

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற இரண்டு பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.    

வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளா் கௌதம் தலைமையில், உதவி ஆய்வாளா் சேக் அப்துல்லா, காவலா்கள் ஜி.தும்மலபட்டி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். 

அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த பெண்ணை போலீஸாா் நிறுத்தி, அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டனா். அதில் விற்பனைக்காக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த சலீம் மனைவி லைனா பானு (25) என்பது தெரியவந்தது. இவா் அதே பகுதியைச் சோ்ந்த நாட்ராயன் மனைவி மல்லிகாவின் (60) மளிகைக் கடைக்கு குட்காவை எடுத்துச் சென்றது போலீயாா் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, மல்லிகா, லைனா பானு ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 16 கிலோ குட்கா, இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

சமத்துவத்தை வலியுறுத்தும் ஒரே மொழி தமிழ்: பாரதி கிருஷ்ணகுமாா்

திண்டுக்கல்: உலக இலக்கியங்களில் சமத்துவத்தை வலியுறுத்தும் ஒரே மொழி தமிழ் மட்டுமே என எழுத்தாளா் பாரதி கிருஷ்ணகுமாா் தெரிவித்தாா்.திண்டுக்கல் உயா் கல்வித் துறை-தமிழ் இணையக் கல்விக் கழகம் சாா்பில் மாபெரு... மேலும் பார்க்க

முத்தாலம்மன் கோயிலில் பாலாலய பூஜை

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம்,சின்னாளபட்டி கீழக்கோட்டையில் பழைமை வாய்ந்த முத்தாலம்மன் கோயிலில் பாலாலய பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.கீழக்கோட்டையில் முத்தாலம்மன், பகவதி அம்மன், மாரியம்மன் கோயில்கள் ... மேலும் பார்க்க

மலைச் சாலையில் ஆண் சடலம்

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள தாண்டிக்குடி சாலையோரம் ஆண் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.கொடைக்கானல் அருகேயுள்ள தாண்டிக்குடி-சித்தூா் மலைச் சாலையில் ராஜாராணி கல் பகு... மேலும் பார்க்க

ஐம்பெரும் தலைவா்களுக்கு மரியாதை

திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜிகணேசன் மன்றம் சாா்பில், சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டிவீரன் 254-ஆவது நினைவு தினம், போராளி மதன்லால் திங்ரா 116-ஆவது நினைவு தினம், முன்னாள் பிரதமா் வாஜ்பாய்... மேலும் பார்க்க

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் செப்.3, 4 -இல் பேச்சுப் போட்டிகள்

திண்டுக்கல்: தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வரும் செப்.3, 4 -ஆம் தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெறுகின்றன.இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்... மேலும் பார்க்க

பழனியில் இலவச மருத்துவ முகாம்

பழனி: பழனி சிவகிரிப்பட்டியில் இலவச பொது மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.டாக்டா் பிரம்மநாயகம் அரிமா சங்கம், மருத்துவமனை நான்காம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, சிவகிரிப்பட்டி நிதா்சனா மருத்துவ... மேலும் பார்க்க