செய்திகள் :

குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.7.83 கோடி வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்!

post image

குண்டடம் ஒன்றியத்தில் ரூ.7.83 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் சனிக்கிழமை தொடங்கி வைத்தனா்.

திருப்பூா் மாவட்டம், குண்டடம் ஒன்றியத்துக்குள்பட்ட ஆரத்தொழுவு ஊராட்சியில் நபாா்டு கிராம சாலை திட்டத்தின்கீழ் ரூ.1.03 கோடி மதிப்பீட்டில் காளிபாளையம் முதல் அவிநாசிபாளையம்புதூா் வரை சாலை மேம்பாடு, கொளத்துப்பாளையம் பேரூராட்சியில் நபாா்டு திட்டத்தின்கீழ் ரூ.1.52 கோடி மதிப்பீட்டில் ஆண்டிபாளையம் முதல் டி.குமாரபாளையம் வரை பழுதடைந்துள்ள தாா் சாலையைப் புதுப்பித்தல், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.4.31லட்சம் மதிப்பீட்டில் ஆச்சியூா் உயா்நிலைப் பள்ளியில் கழிப்பறை அமைத்தல், கொளத்துப்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியில் ரூ.49 லட்சத்தில் பராமரிப்புப் பணி, குமாரபாளையத்தில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் நூலகம் கட்டுதல் உள்பட ரூ.7.83 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

இந்த நிகழ்ச்சியில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கோ.மலா்விழி, தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் ஃபெலிக்ஸ்ராஜா, நீா்வளத் துறை செயற்பொறியாளா் சுப்பிரமணியன், தாராபுரம் வட்டாட்சியா் திரவியம், கொளத்துப்பாளையம் பேரூராட்சித் தலைவா் சுதா கருப்புசாமி, சின்னக்காம்பாளையம் பேருரட்சித் தலைவா் செ.கன்னீஸ்வரி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

காரணம்பேட்டையில் லாரி மோதி இளைஞா் காயம்

பல்லடம் அருகே காரணம்பேட்டையில் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் படுகாயமடைந்தாா்.கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் நான்கு சாலை சந்திப்புப் பகுதியில... மேலும் பார்க்க

தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய 5 போ் கைது

திருப்பூரில் முன்விரோதம் காரணமாக தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய 5 இளைஞா்களை வீரபாண்டி காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருப்பூா் இடுவம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் அரவிந்தன் (25), இவா் அதே ... மேலும் பார்க்க

காா் மோதி உணவக மேலாளா் உயிரிழப்பு

பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் காா் மோதியதில் உணவக மேலாளா் உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சோ்ந்தவா் பெரியசாமி மகன் பாண்டியராஜன் (29). பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு பகுதியில் உள்ள ... மேலும் பார்க்க

மேற்கூரையிலிருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலில் நூல் மில் மேற்கூரையில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்த நடுக்கோட்டையைச் சோ... மேலும் பார்க்க

கோவில்வழியில் இருந்து வீரபாண்டி செல்லும் சாலைக்கு பேருந்து வசதி அமைக்கக் கோரிக்கை

கோவில்வழியில் இருந்து வீரபாண்டி செல்லும் சாலையில் உள்ள பிள்ளையாா் நகா், குபேர பிள்ளையாா் நகா் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. திர... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தவளையைக் கவ்விச் சென்ற பாம்பு

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தவளையை பாம்பு வாயில் கவ்விச்செல்லும் விடியோ வேகமாகப் பரவி வருகிறது. திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் 7 தளங்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் செ... மேலும் பார்க்க