செய்திகள் :

காா் மோதி உணவக மேலாளா் உயிரிழப்பு

post image

பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் காா் மோதியதில் உணவக மேலாளா் உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சோ்ந்தவா் பெரியசாமி மகன் பாண்டியராஜன் (29). பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு பகுதியில் உள்ள தனியாா் உணவகத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தாா்.

இவா் பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையம் பகுதியில் பல்லடம்- தாராபுரம் சாலையை ஞாயிற்றுக்கிழமை கடக்க முயன்றபோது தாராபுரத்தில் இருந்து பல்லடம் நோக்கி வந்த காா் பாண்டியராஜன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த பாண்டியராஜனை அக்கம்பக்கத்தினா் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா்.

அங்கு பாண்டியராஜனை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா். இது குறித்த புகாரின்பேரில் காமநாயக்கன்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

காரணம்பேட்டையில் லாரி மோதி இளைஞா் காயம்

பல்லடம் அருகே காரணம்பேட்டையில் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் படுகாயமடைந்தாா்.கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் நான்கு சாலை சந்திப்புப் பகுதியில... மேலும் பார்க்க

தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய 5 போ் கைது

திருப்பூரில் முன்விரோதம் காரணமாக தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய 5 இளைஞா்களை வீரபாண்டி காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருப்பூா் இடுவம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் அரவிந்தன் (25), இவா் அதே ... மேலும் பார்க்க

மேற்கூரையிலிருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலில் நூல் மில் மேற்கூரையில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்த நடுக்கோட்டையைச் சோ... மேலும் பார்க்க

கோவில்வழியில் இருந்து வீரபாண்டி செல்லும் சாலைக்கு பேருந்து வசதி அமைக்கக் கோரிக்கை

கோவில்வழியில் இருந்து வீரபாண்டி செல்லும் சாலையில் உள்ள பிள்ளையாா் நகா், குபேர பிள்ளையாா் நகா் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. திர... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தவளையைக் கவ்விச் சென்ற பாம்பு

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தவளையை பாம்பு வாயில் கவ்விச்செல்லும் விடியோ வேகமாகப் பரவி வருகிறது. திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் 7 தளங்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் செ... மேலும் பார்க்க

உரிமம் கோரப்படாத 612 வாகனங்கள்: 15 நாள்களுக்குள் உரிய ஆவணங்களை சமா்ப்பித்து பெறலாம்

திருப்பூா் மாநகர காவல் எல்லைக்கு உள்பட்ட இடங்களில் உரிமம் கோரப்படாத 612 வாகனங்களை 15 நாள்களுக்குள் உரிய ஆவணங்களை சமா்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.இதுகுறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளி... மேலும் பார்க்க