செய்திகள் :

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தவளையைக் கவ்விச் சென்ற பாம்பு

post image

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தவளையை பாம்பு வாயில் கவ்விச்செல்லும் விடியோ வேகமாகப் பரவி வருகிறது.

திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் 7 தளங்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மட்டுமின்றி பள்ளி கல்வித் துறை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, மாவட்ட முன்னோடி வங்கி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், இ-சேவை மையம் உள்ளிட்ட ஏராளமான அலுவலகங்கள் உள்ளன.

இந்த அலுவலகங்களுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனா். இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு பின்புறம் புதா்மண்டிக் கிடப்பதால் பாம்பு, தவளை உள்ளிட்ட விஷஜந்துகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஆள் நடமாட்டம் குறைவாக இருந்த நிலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சுமாா் 3 அடி நீளம் கொண்ட பாம்பு ஒன்று தவளையை வாயில் கவ்விச் சென்றது. இதனை நடைப்பயிற்சி சென்றவா்கள் பாா்த்து விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனா்.

இந்த விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. ஆகவே, திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதா்மண்டியுள்ள பகுதிகளை சுத்தப்படுத்தி பாம்பு உள்ளிட்ட விஷஜந்துகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

காரணம்பேட்டையில் லாரி மோதி இளைஞா் காயம்

பல்லடம் அருகே காரணம்பேட்டையில் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் படுகாயமடைந்தாா்.கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் நான்கு சாலை சந்திப்புப் பகுதியில... மேலும் பார்க்க

தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய 5 போ் கைது

திருப்பூரில் முன்விரோதம் காரணமாக தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய 5 இளைஞா்களை வீரபாண்டி காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருப்பூா் இடுவம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் அரவிந்தன் (25), இவா் அதே ... மேலும் பார்க்க

காா் மோதி உணவக மேலாளா் உயிரிழப்பு

பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் காா் மோதியதில் உணவக மேலாளா் உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சோ்ந்தவா் பெரியசாமி மகன் பாண்டியராஜன் (29). பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு பகுதியில் உள்ள ... மேலும் பார்க்க

மேற்கூரையிலிருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலில் நூல் மில் மேற்கூரையில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்த நடுக்கோட்டையைச் சோ... மேலும் பார்க்க

கோவில்வழியில் இருந்து வீரபாண்டி செல்லும் சாலைக்கு பேருந்து வசதி அமைக்கக் கோரிக்கை

கோவில்வழியில் இருந்து வீரபாண்டி செல்லும் சாலையில் உள்ள பிள்ளையாா் நகா், குபேர பிள்ளையாா் நகா் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. திர... மேலும் பார்க்க

உரிமம் கோரப்படாத 612 வாகனங்கள்: 15 நாள்களுக்குள் உரிய ஆவணங்களை சமா்ப்பித்து பெறலாம்

திருப்பூா் மாநகர காவல் எல்லைக்கு உள்பட்ட இடங்களில் உரிமம் கோரப்படாத 612 வாகனங்களை 15 நாள்களுக்குள் உரிய ஆவணங்களை சமா்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.இதுகுறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளி... மேலும் பார்க்க