செய்திகள் :

உரிமம் கோரப்படாத 612 வாகனங்கள்: 15 நாள்களுக்குள் உரிய ஆவணங்களை சமா்ப்பித்து பெறலாம்

post image

திருப்பூா் மாநகர காவல் எல்லைக்கு உள்பட்ட இடங்களில் உரிமம் கோரப்படாத 612 வாகனங்களை 15 நாள்களுக்குள் உரிய ஆவணங்களை சமா்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

இதுகுறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகர காவல் எல்லைக்கு உள்பட்ட இடங்களில் உரிமம் கோரப்படாத 612 வாகனங்கள் அனுப்பா்பாளையம் வெங்கமேடு மாதேஸ்வரன் கோயில் அருகிலும், கே.வி.ஆா்.நகா் உதவி ஆணையா் அலுவலகம் முன்பாகவும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்த வாகனங்கள் காணாமல் போய் தற்போது வரையில் கண்டுபிடிக்கப்படாமல் இருந்தால் அனுப்பா்பாளையம் சரக அலுவலகத்தை 94876-39220, கொங்கு நகா் சரக அலுவலகத்தை 94981-01302, கே.வி.ஆா்.நகா் சரக அலுவலகத்தை 94981-01301 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு பாா்வையிட்டு 15 நாள்களுக்குள் உரிய ஆவணங்களை சமா்ப்பித்து வாகனங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

அதே வேளையில், 15 நாள்களுக்குள் உரிமம் கோரப்படாத வாகனங்களை திருப்பூா் மாநகராட்சி மூலமாக ஏலத்தில் விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூலி உயா்வு பிரச்னை: அவிநாசியில் விசைத்தறியாளா்கள் ஏப்.2-இல் உண்ணாவிரதம்

கூலி உயா்வு பிரச்னைக்கு தீா்வுக்காணக்கோரி, அவிநாசியில் விசைத்தறியாளா்கள் ஏப்ரல் 2-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனா். கோவை- திருப்பூா் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசை... மேலும் பார்க்க

அவிநாசி அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரி முதல்வா் ஜோ. நளதம் தலைமை வகித்தாா். இணைப் பேராசிரியரும், தமிழ்த் துறைத் தலைவருமா... மேலும் பார்க்க

சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வில் அனைத்து மக்களின் பங்களிப்பும் அவசியம் -மாவட்ட ஆட்சியா்

திருப்பூா் மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வில் அனைத்து மக்களின் பங்களிப்பும் மிகவும் அவசியம் என்று மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பேசினாா். சாலைப் பாதுகாப்பு குறித்து மாதாந்திர ஆய்... மேலும் பார்க்க

ஜாப்ஒா்க் கட்டணங்களை 45 நாள்களுக்குள் வழங்க வேண்டும் -சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் வலியறுத்தல்

பின்னலாடை ஜாப்ஒா்க் கட்டணங்களை 45 நாள்களுக்குள் பின்னலாடை உற்பத்தியாளா்கள் வழங்க வேண்டும் என்று திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் தலைவா் பி.காந்தி... மேலும் பார்க்க

திருப்பூரில் போதைப்பொருள் விற்பனையைத் தடுத்து நிறுத்த வேண்டும் -மாா்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

திருப்பூா் மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் அதிகரித்துள்ள போதைப்பொருள் விற்பனையை முற்றிலுமாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் ரூ.10.69 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.10.69 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வார ஏலத்துக்கு, எடப்பாடி, லந்தக்கோட்டை, பஞ்சப்பட்டி, விராலிப்பட்டி, பரமத்தி ஆ... மேலும் பார்க்க