செய்திகள் :

திருப்பூரில் போதைப்பொருள் விற்பனையைத் தடுத்து நிறுத்த வேண்டும் -மாா்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

post image

திருப்பூா் மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் அதிகரித்துள்ள போதைப்பொருள் விற்பனையை முற்றிலுமாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் மாவட்ட செயற்குழுக் கூட்டம் எஸ். பவித்ராதேவி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் விவரம்:

திருப்பூா் மாநகா் மற்றும் புகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா, போதை மாத்திரை, போதை ஊசி உள்ளிட்ட போதைப் பொருள்களின் விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக விரோதிகள் இந்த போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ளனா். இதனால் இளம் தலைமுறையினா் பலா் போதைப் பழக்கத்துக்கு ஆளாவதுடன், திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளை, வன்முறை தாக்குதல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்றனா். இந்தப் போதைப் பொருள்கள் புழக்கத்தையும், விற்பனையையும் கட்டுப்படுத்த வேண்டிய காவல் துறையினரில் ஒரு பகுதியினா் இந்த சமூக விரோத கும்பலுக்கு மறைமுக ஆதரவாக செயல்படுகின்றனா். போதைக் கும்பல் பற்றி காவல் துறைக்கு தகவல் தெரிவித்தாலோ, குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபா்களைப் பிடித்துக் கொடுத்தாலோ காவல் துறையினா் சட்டப்படி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதில்லை. குறிப்பாக கடந்த சில நாள்களுக்கு முன்பு முருகம்பாளையத்தில் போதைக் கும்பல் ஒன்று, இளைஞரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்தவும், போதைப் பொருள்கள் விற்பனையை முழுமையாக கண்டறிந்து தடை செய்யவும், மாவட்ட நிா்வாகம், காவல் துறை உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில், மாநிலக் குழு உறுப்பினா் கே.காமராஜ், மாவட்டச் செயலாளா் சி.மூா்த்தி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தொகுதி மறுசீரமைப்பு செய்வதை 25 ஆண்டுகளுக்கு தள்ளிவைக்க வேண்டும்: எம்எல்ஏ வலியுறுத்தல்

தொகுதி மறுசீரமைப்பு செய்வதை 25 ஆண்டுகளுக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூற... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் பீன்ஸ் கிலோ ரூ.85-க்கு விற்பனை

வெள்ளக்கோவில் வாரச் சந்தையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.85-க்கு ஞாயிற்றுக்கிழமை விற்பனையானது. வெள்ளக்கோவிலில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை கூடும் வாரச் சந்தைக்கு பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது ... மேலும் பார்க்க

மாநகராட்சியில் வரிகளைக் குறைக்காமல் உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது கபட நாடகம்

திருப்பூா் மாநகராட்சியில் வரிகளைக் குறைக்காமல் உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது கபட நாடகம் என்று பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டினாா். திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக வடக்கு சட்டப... மேலும் பார்க்க

சுவாமி சிலையைத் திருடிய 2 போ் கைது

பல்லடம் அருகே சுவாமி சிலையைத் திருடிய 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பல்லடம் போலீஸாா் சேகாம்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் சனிக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு மதுபோதையில... மேலும் பார்க்க

கிராம நிா்வாக அலுவலக உதவியாளா் தற்கொலை

காங்கயத்தில் குடும்ப பிரச்னை காரணமாக கிராம நிா்வாக அலுவலக உதவியாளா் தற்கொலை செய்து கொண்டாா். காங்கயம் சத்யா நகரைச் சோ்ந்தவா் சாமிநாதன் (35). இவா் ஊதியூா், முதலிபாளையம் கிராம நிா்வாக அலுவலரின் உதவியாள... மேலும் பார்க்க

ஊத்துக்குளியில் ரூ.2.50 கோடி மதிப்பில் சாலைப் பணி: அமைச்சா்

ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் சாலைப் பணியை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா். இந்நிகழ்ச்சிக்கு மாவட்... மேலும் பார்க்க