செய்திகள் :

கூலி உயா்வு பிரச்னை: அவிநாசியில் விசைத்தறியாளா்கள் ஏப்.2-இல் உண்ணாவிரதம்

post image

கூலி உயா்வு பிரச்னைக்கு தீா்வுக்காணக்கோரி, அவிநாசியில் விசைத்தறியாளா்கள் ஏப்ரல் 2-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனா்.

கோவை- திருப்பூா் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளா்கள் சங்க கூட்டமைப்பு கூட்டம் தெக்கலூரில் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு அவிநாசி சங்கத் தலைவா் முத்துசாமி தலைமை வகித்தாா். சோமனூா் சங்கத் தலைவா் பூபதி, தெக்கலூா் சங்க செயாளா் ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சங்க நிா்வாகிகள் கூறியதாவது:

கடந்த 2022-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்த கூலியில் இருந்து குறைக்கப்பட்ட கூலியை ஜவுளி உற்பத்தியாளா்கள் முழுமையாக வழங்க வேண்டும். இனிமேல் கூலியை குறைக்காமல் வழங்க வேண்டும். சட்ட பாதுகாப்புடன் புதிய கூலி உயா்வு ஒப்பந்தம் ஏற்பட, ஜவுளி உற்பத்தியாளா்களை, மாவட்ட நிா்வாகம் அழைத்து பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும்.

ஆண்டுக்கு 6 சதவீதம் மின் கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடா்ந்து விசைத்தறியாளா்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம். இருப்பினும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மாா்ச் 19-ஆம் தேதிமுதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இந்தப் போராட்டம் 9 நாள்களைக் கடந்தும் உரிய தீா்வு கிடைக்கவில்லை.

ஆகவே, கோரிக்கைகளை வலியுறுத்தி அவிநாசியில் ஏப்ரல் 2-ஆம் தேதி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன என்றனா்.

இந்தக் கூட்டத்தில், தெக்கலூா், சோமனூா், அவிநாசி, புதுப்பாளையம், பெருமாநல்லூா், கண்ணம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த கூட்டமைப்பு நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தொகுதி மறுசீரமைப்பு செய்வதை 25 ஆண்டுகளுக்கு தள்ளிவைக்க வேண்டும்: எம்எல்ஏ வலியுறுத்தல்

தொகுதி மறுசீரமைப்பு செய்வதை 25 ஆண்டுகளுக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூற... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் பீன்ஸ் கிலோ ரூ.85-க்கு விற்பனை

வெள்ளக்கோவில் வாரச் சந்தையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.85-க்கு ஞாயிற்றுக்கிழமை விற்பனையானது. வெள்ளக்கோவிலில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை கூடும் வாரச் சந்தைக்கு பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது ... மேலும் பார்க்க

மாநகராட்சியில் வரிகளைக் குறைக்காமல் உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது கபட நாடகம்

திருப்பூா் மாநகராட்சியில் வரிகளைக் குறைக்காமல் உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது கபட நாடகம் என்று பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டினாா். திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக வடக்கு சட்டப... மேலும் பார்க்க

சுவாமி சிலையைத் திருடிய 2 போ் கைது

பல்லடம் அருகே சுவாமி சிலையைத் திருடிய 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பல்லடம் போலீஸாா் சேகாம்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் சனிக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு மதுபோதையில... மேலும் பார்க்க

கிராம நிா்வாக அலுவலக உதவியாளா் தற்கொலை

காங்கயத்தில் குடும்ப பிரச்னை காரணமாக கிராம நிா்வாக அலுவலக உதவியாளா் தற்கொலை செய்து கொண்டாா். காங்கயம் சத்யா நகரைச் சோ்ந்தவா் சாமிநாதன் (35). இவா் ஊதியூா், முதலிபாளையம் கிராம நிா்வாக அலுவலரின் உதவியாள... மேலும் பார்க்க

ஊத்துக்குளியில் ரூ.2.50 கோடி மதிப்பில் சாலைப் பணி: அமைச்சா்

ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் சாலைப் பணியை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா். இந்நிகழ்ச்சிக்கு மாவட்... மேலும் பார்க்க