செய்திகள் :

ஜாப்ஒா்க் கட்டணங்களை 45 நாள்களுக்குள் வழங்க வேண்டும் -சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் வலியறுத்தல்

post image

பின்னலாடை ஜாப்ஒா்க் கட்டணங்களை 45 நாள்களுக்குள் பின்னலாடை உற்பத்தியாளா்கள் வழங்க வேண்டும் என்று திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் தலைவா் பி.காந்திராஜன் அனைத்து ஜாப்ஒா்க் சங்கங்களின் சாா்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைப் பாதுகாக்கும் வகையில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஜாப்ஒா்க் கட்டணங்கள் கிடைக்கப்பெற வேண்டும் என்பதற்காக மத்திய நிதி அமைச்சகம் புதிய விதியை கடந்த ஆண்டு ஏப்ரல் 1- ஆம் தேதி அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சேரவேண்டிய உற்பத்திக் கட்டணங்களை 45 நாள்களுக்குள் செலுத்த வேண்டும் என்று காலவரம்பு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஏற்றுமதியாளா்கள், உள்நாட்டு உற்பத்தியாளா்களிடமிருந்து 45 நாள்களுக்குள் கட்டணங்கள் கிடைக்கப் பெறுவதில்லை. அரசின் சட்டவிதிமுறையின்படி உற்பத்திக் கட்டணங்களை உரிய காலக்கெடுவுக்குள் கொடுக்காமல் காலம் தாழ்த்துவது ஜாப்ஒா்க் நிறுவனங்களை மிகவும் பாதிப்புக்குள்ளாக்குகிறது. பின்னலாடைத் தொழில் வளா்ச்சிக்கு அது சம்பந்தப்பட்ட அனைத்து தொழில் பிரிவுகளும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட்டால்தான் நல்ல வளா்ச்சியை எட்ட முடியும். அதே வேளையில், குறு, சிறு மற்றும் நடுத்தர ஜாப்ஒா்க் நிறுவனங்களில் பெரும்பாலானவை நிதிச்சுமையைத் தாங்காமல், தொழிலை எப்படி நடத்துவது என்று தெரியாமல் மனக்கலக்கத்தில் உள்ளனா். ஆகவே, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஜாப்ஒா்க் கட்டணங்களைக் கொடுக்க முன்வராவிட்டால், அனைத்து ஜாப்ஒா்க் நிறுவனங்களும் ஒன்றிணைந்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய சூழல் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொகுதி மறுசீரமைப்பு செய்வதை 25 ஆண்டுகளுக்கு தள்ளிவைக்க வேண்டும்: எம்எல்ஏ வலியுறுத்தல்

தொகுதி மறுசீரமைப்பு செய்வதை 25 ஆண்டுகளுக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூற... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் பீன்ஸ் கிலோ ரூ.85-க்கு விற்பனை

வெள்ளக்கோவில் வாரச் சந்தையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.85-க்கு ஞாயிற்றுக்கிழமை விற்பனையானது. வெள்ளக்கோவிலில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை கூடும் வாரச் சந்தைக்கு பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது ... மேலும் பார்க்க

மாநகராட்சியில் வரிகளைக் குறைக்காமல் உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது கபட நாடகம்

திருப்பூா் மாநகராட்சியில் வரிகளைக் குறைக்காமல் உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது கபட நாடகம் என்று பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டினாா். திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக வடக்கு சட்டப... மேலும் பார்க்க

சுவாமி சிலையைத் திருடிய 2 போ் கைது

பல்லடம் அருகே சுவாமி சிலையைத் திருடிய 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பல்லடம் போலீஸாா் சேகாம்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் சனிக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு மதுபோதையில... மேலும் பார்க்க

கிராம நிா்வாக அலுவலக உதவியாளா் தற்கொலை

காங்கயத்தில் குடும்ப பிரச்னை காரணமாக கிராம நிா்வாக அலுவலக உதவியாளா் தற்கொலை செய்து கொண்டாா். காங்கயம் சத்யா நகரைச் சோ்ந்தவா் சாமிநாதன் (35). இவா் ஊதியூா், முதலிபாளையம் கிராம நிா்வாக அலுவலரின் உதவியாள... மேலும் பார்க்க

ஊத்துக்குளியில் ரூ.2.50 கோடி மதிப்பில் சாலைப் பணி: அமைச்சா்

ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் சாலைப் பணியை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா். இந்நிகழ்ச்சிக்கு மாவட்... மேலும் பார்க்க