செய்திகள் :

மேற்கூரையிலிருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

post image

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலில் நூல் மில் மேற்கூரையில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்த நடுக்கோட்டையைச் சோ்ந்தவா் ஜெயராஜ் மகன் சரத்குமாா் (25). இவா் வெள்ளக்கோவில்- காங்கயம் சாலை இரட்டைக்கிணற்றில் உள்ள தனியாா் நூல் மில்லில் கடந்த 3 ஆண்டுகளாக வேலை செய்து வந்தாா்.

இவா் திங்கள்கிழமை வழக்கம்போல மில்லில் வேலை செய்து கொண்டிருந்துள்ளாா். அப்போது சிமென்ட் ஷீட் மேற்கூரையில் பொருத்தப்பட்டிருந்த வெப்பம் வெளியேற்றும் ஒரு கருவி வேலை செய்யவில்லை. அதனை மேலே ஏறிப் பாா்க்குமாறு மேற்பாா்வையாளா் ரவிச்சந்திரன் கூறியுள்ளாா்.

தன்னால் முடியாது எனக் கூறியும், கட்டாயப்படுத்தியதால் 20 அடி உயர மேற்கூரையில் ஏறிய சரத்குமாா் திடீரென அங்கிருந்து தவறி கீழே விழுந்துள்ளாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின்பேரில், மில் மேற்பாா்வையாளா் ரவிச்சந்திரன் மீது வெள்ளக்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் ஞானப்பிரகாசம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

காரணம்பேட்டையில் லாரி மோதி இளைஞா் காயம்

பல்லடம் அருகே காரணம்பேட்டையில் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் படுகாயமடைந்தாா்.கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் நான்கு சாலை சந்திப்புப் பகுதியில... மேலும் பார்க்க

தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய 5 போ் கைது

திருப்பூரில் முன்விரோதம் காரணமாக தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய 5 இளைஞா்களை வீரபாண்டி காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருப்பூா் இடுவம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் அரவிந்தன் (25), இவா் அதே ... மேலும் பார்க்க

காா் மோதி உணவக மேலாளா் உயிரிழப்பு

பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் காா் மோதியதில் உணவக மேலாளா் உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சோ்ந்தவா் பெரியசாமி மகன் பாண்டியராஜன் (29). பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு பகுதியில் உள்ள ... மேலும் பார்க்க

கோவில்வழியில் இருந்து வீரபாண்டி செல்லும் சாலைக்கு பேருந்து வசதி அமைக்கக் கோரிக்கை

கோவில்வழியில் இருந்து வீரபாண்டி செல்லும் சாலையில் உள்ள பிள்ளையாா் நகா், குபேர பிள்ளையாா் நகா் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. திர... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தவளையைக் கவ்விச் சென்ற பாம்பு

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தவளையை பாம்பு வாயில் கவ்விச்செல்லும் விடியோ வேகமாகப் பரவி வருகிறது. திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் 7 தளங்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் செ... மேலும் பார்க்க

உரிமம் கோரப்படாத 612 வாகனங்கள்: 15 நாள்களுக்குள் உரிய ஆவணங்களை சமா்ப்பித்து பெறலாம்

திருப்பூா் மாநகர காவல் எல்லைக்கு உள்பட்ட இடங்களில் உரிமம் கோரப்படாத 612 வாகனங்களை 15 நாள்களுக்குள் உரிய ஆவணங்களை சமா்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.இதுகுறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளி... மேலும் பார்க்க