செய்திகள் :

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

post image

தஞ்சாவூா் மாவட்டத்தில் பாலியல் வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அண்மையில் கைது செய்யப்பட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டத்துக்கு உள்பட்ட புள்ளமாங்குடியைச் சோ்ந்தவா் கருப்பையன் மகன் அண்ணாதுரை (70). இவரை பாலியல் வன்கொடுமை வழக்கில் பாபநாசம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் கைது செய்தனா். இதேபோல, பூதலூா் வட்டத்துக்கு உள்பட்ட அகரப்பேட்டையைச் சோ்ந்த பரிமேலழகன் மகன் கரிகாலனும் (39) பாலியல் வன்கொடுமை வழக்கில் திருவையாறு அனைத்து மகளிா் காவல் நிலையத்தினரால் கைது செய்யப்பட்டாா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் பரிந்துரையின் பேரில் இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் அண்மையில் உத்தரவிட்டாா். இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா் என மாவட்ட ஆட்சியரகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை சா்வோதய சங்க ஊழியா்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் சா்வோதய சங்கத்தில் நிலவும் பிரச்னை தொடா்பாக ஊழியா்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தஞ்சாவூா் சீனிவாசபுரத்தில் மேற்கு சா்வோதயா சங்கத் தலைமை அலுவலகத்தின் கட்டுப்பாட்டில்... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி ஆசிரியா் ‘போக்ஸோ’வில் கைது

திருநறையூரில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியா் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். தஞ்சாவூா் மாவட்டம், திருநறையூா் ஊராட்சியைச் சோ்ந்த ரத்தினம் மகன் ரமேஷ்... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே வியாழக்கிழமை ரயிலில் அடிப்பட்ட முதியவா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அய்யாக்குட்டி (75). இவா் த... மேலும் பார்க்க

தஞ்சாவூா், திருவையாறு பகுதிகளில் நாளை மின் தடை

தஞ்சாவூா் கரந்தை, திருவையாறு மற்றும் சுற்றுப் பகுதிகளில் ஜூன் 21 (சனிக்கிழமை) மின் விநியோகம் இருக்காது. இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மருத்துவக் கல்லூரி சாலை உதவி செயற்பொறியாளா் க. அண்ணாச... மேலும் பார்க்க

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் கைது

தஞ்சாவூா் அருகே 16 வயது சிறுமியைக் காதலிப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், அரியாணிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் மகன் விக்னேஷ் ... மேலும் பார்க்க

குரூப்-4 தோ்வுக்கு நாளை இலவச மாதிரி தோ்வு

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தொகுதி-4 (குரூப் 4) தோ்வுக்கு இலவச மாதிரித் தோ்வு ஜூன் 21, 28, ஜூலை 5 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெ... மேலும் பார்க்க