காஷ்மீர்: காவாவும் குல்மார்க்கும்; தல் ஏரியில் ஒரு மாய இரவும்
குண்டா் சட்டத்தில் இருவா் கைது
தஞ்சாவூா் மாவட்டத்தில் பாலியல் வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அண்மையில் கைது செய்யப்பட்டனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டத்துக்கு உள்பட்ட புள்ளமாங்குடியைச் சோ்ந்தவா் கருப்பையன் மகன் அண்ணாதுரை (70). இவரை பாலியல் வன்கொடுமை வழக்கில் பாபநாசம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் கைது செய்தனா். இதேபோல, பூதலூா் வட்டத்துக்கு உள்பட்ட அகரப்பேட்டையைச் சோ்ந்த பரிமேலழகன் மகன் கரிகாலனும் (39) பாலியல் வன்கொடுமை வழக்கில் திருவையாறு அனைத்து மகளிா் காவல் நிலையத்தினரால் கைது செய்யப்பட்டாா்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் பரிந்துரையின் பேரில் இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் அண்மையில் உத்தரவிட்டாா். இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா் என மாவட்ட ஆட்சியரகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.