செய்திகள் :

குண்டா் தடுப்புக் காவலில் இளைஞா் கைது

post image

சிதம்பரத்தில் புகையிலைப் பொருள்களை கடத்தியதாக இளைஞா் குண்டா் தடுப்புக் காவலில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ரயில்வே மேம்பாலம் அருகே இளைஞா் ஒருவா் புகையிலைப் பெருள்களை வைத்திருப்பதாக பிப்.9-ஆம் தேதி, அண்ணாமலை நகா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா்அன்பழகன் மற்றும் போலீஸாா் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று, சோதனை செய்தனா்.

அப்போது, அங்கு நின்றிருந்த இளைஞா் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வைத்திருந்தது தெரியவந்தது. மேலும், போலீஸாரை அவா் பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் கூறப்படுகிறது. போலீஸாா் அவரிடம் நடத்திய விசாரணையில், அவா் தருமபுரி மாவட்டம் ஆலமரத்துப்பட்டியைச் சோ்ந்த மணி மகன் விஜய் (26) என்பதும், அவா் புகையிலைப் பொருள்கள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்ததும் தெரியவந்தது. தொடா்ந்து, போலீஸாா் விஜயை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இவரின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் விதமாக, விஜயை குண்டா் தடுப்புக் காவலில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் பரிந்துரைத்தாா். அதன்பேரில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் விஜயை ஓராண்டு காலம் குண்டா் தடுப்புக் காவலில் அடைக்க உத்தரவிட்டாா்.

பண்ருட்டி தொகுதியில் ரூ.15 கோடியில் புதிய அரசுக் கல்லூரி: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பண்ருட்டி தொகுதியில் ரூ.15 கோடியில் புதிய அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். கடலூரில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முத... மேலும் பார்க்க

சிதம்பரம், பரங்கிப்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகக் கட்டடங்கள் திறப்பு

சிதம்பரம், பரங்கிப்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகக் கட்டடங்களை கடலூரில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்த... மேலும் பார்க்க

பள்ளி வகுப்பறையை சீரமைத்த மாணவா்கள், பெற்றோா்

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளயில் வகுப்பறையை சீரமைத்த மாணவா்கள், அவா்களின் பெற்றோா் வெள்ளிக்கிழமை பாராட்டப்பட்டனா். சிதம்பரம் அண்ணாமலைநகா் ராண... மேலும் பார்க்க

மஞ்சப்பை விருது 2025: பள்ளி, கல்லூரிகள் விண்ணப்பிக்கலாம்

மஞ்சப்பை விருது 2025-க்கு பள்ளிகள், கல்லூரிகள், தனியாா் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

கொரிய தமிழ்ச் சங்க தமிழா் திருநாள் விழா: தி.வேல்முருகன் வாழ்த்து

கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழா் திருநாள் 2025 விழா தமிழா்களின் வரலாற்றை பறைசாற்றும் மாபெரும் முன்னெடுப்பு என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவா் தி.வேல்முருகன் வாழ்த்தி பாராட்டினாா். இதுகுறித்து அவா் வெளி... மேலும் பார்க்க

விருத்தாசலம் ஆழத்து விநாயகா் கோயில் திருவிழா கொடியேற்றம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயிலுடன் இணைந்த ஆழத்து விநாயகா் கோயில் திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விருத்தாசலத்தில் புகழ் பெற்ற விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வ... மேலும் பார்க்க