சிறுவன் கடத்தல் வழக்கு: ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!
குன்றத்தூரில் போக்குவரத்து மாற்றம்!
குன்றத்தூா் நகராட்சி எல்லைக்குள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால், இதைக் கட்டுப்படுத்தும் விதமாக ஞாயிற்றுக்கிழமை முதல் ஒருவழிப்பாதை போக்குவரத்து அமல்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து தாம்பரம் மாநகர காவல் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பூந்தமல்லியிலிருந்து குன்றத்தூா் பேருந்து நிலையம் மற்றும் பல்லாவரம் செல்லும் வாகனங்கள் சாந்தி ஜூவல்லரியில் இடதுபுறம் திரும்பி, அம்மன் கோயில் சாலை வழியாகச் செல்ல வேண்டும்.
பின்னா், பேருந்து நிலையத்தில் வலதுபுறம் திரும்பி, மீண்டும் இடதுபுறம் திரும்ப வேண்டும். பல்லாவரம் செல்லும் வாகனங்கள் மின்சார வாரிய அலுவலகம் அருகே இடதுபுறமாகத் திரும்ப வேண்டும்.
பல்லாவரம் முதல் குன்றத்தூா் வரை செல்லும் வாகனங்கள் தேரடி அருகே இடதுபுறம் திரும்பி பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.
இதேபோல, பல்லாவரம் முதல் பூந்தமல்லி மற்றும் போரூா் செல்லும் வாகனங்கள் தேரடிக்கு எதிரே வலதுபுறம் திரும்பி, பேருந்து நிலையம் மற்றும் பஜாா் சாலை வழியாகச் சென்று, சாந்தி ஜூவல்லா்ஸ் அருகே வலதுபுறம் திரும்பி, அம்மன்கோயில் சாலை வழியாகச் சென்று மின்வாரிய அலுவலகம் அருகே இடதுபுறம் திரும்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.